-
வட-இலங்கை பள்ளிக்கூடங்களில் கற்பிக்க இராணுவத்தினர்
இலங்கையின் வடக்கே பள்ளிக்கூடங்களில் இராணுவத்தினரைக் கொண்டு சிங்கள மொழியை கற்பிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
-
தேசிய எல்லை நிர்ணயம் தொடர்பிலான மாற்றுக் கருத்துக்களையும், அபிப்பிராயங்களையும் முஸ்லிம் மக்கள் முஸ்லிம் காங்கிரசுக்கு தெரியப்படுத்தவும்- கிழக்கு மாகாண அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்
– பழுளுல்லாஹ் பர்ஹான் தேசிய எல்லை நிர்ணயம் தொடர்பிலான மாற்றுக் கருத்துக்களையும், அபிப்பிராயங்களையும் முஸ்லிம் மக்கள் குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியிலுள்ள முஸ்லிம் மக்கள் உடனடியாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு அல்லது கட்சியின் தலைமைக்குத் தெரியப்படுத்துமாறு அந்தக் கட்சியின் பிரதித் தலைவரும், கிழக்கு மாகாண அமைச்சருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
வெள்ளப் பெறுக்கினால் அடிக்கடி பாதிக்கப்படும் தாறுஸ்ஸலாம் பகுதிக்கு காத்தான்குடி பிரதேச செயலாளர் முஸம்மில் தலைமையிலான குழுவினர் திடீர் விஜயம்- வெள்ள நிலைமைகள் தொடர்பில் பிரதேச மக்களிடம் கேட்டறிந்தனர்
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு மாவட்டத்தில் அடிக்கடி வெள்ளப் பெறுக்கினால் பாதிக்கப்படும் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தாறுஸ்ஸலாம் பகுதிக்கு காத்தான்குடி பிரதேச செயலாளர் ஏ.எச்.எம்.முஸம்மில் தலைமையிலான குழுவினர் இன்று வெள்ளிக்கிழமை திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார்.
-
அடுத்த பிரதம நீதியரசராக நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை: சீ. யோகேஸ்வரன்
‘ஜனாதிபதியின் மகன் நாமல் ராஜபக்ஷவை பிரதம நீதியரசராக நியமித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
-
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் மலாலா
பாகிஸ்தானில் சிறுமிகளின் கல்விக்காக குரல்கொடுத்துவந்த நிலையில் தாலிபான்களால் தலையில் சுடப்பட்டிருந்த பதின்ம வயதுச் சிறுமி மலாலா யூஸுஃப்ஸயீ, பிரிட்டனில் சிகிச்சை பெற்றுவந்த மருத்துவமனையில் இருந்து உடல் நலம் தேறியதால் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
-
சமாதானத்தையும், அமைதியையும் ஏற்படுத்த முயற்சியெடுப்பது மதத் தலைவர்களின் கடமை: ஜம்இய்யத்துல் உலமா
சமாதானத்தையும், அமைதியையும் ஏற்படுத்த முயற்சியெடுப்பது மதத் தலைவர்களின் கடமையாகும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை தெரிவித்துள்ளது.
-
வீதியை உடனடியாக புனரமைக்கக் கோரி கொட்டும் மழைக்கும் மத்தியில் தாறுஸ்ஸலாம் பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில்
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தாறுஸ்ஸலாம் வீதியில் வசிக்கும் மக்கள் அடிக்கடி வெள்ளப் பெறுக்கினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து வருவதால் குறித்த வீதியை உடனடியாக புனரமைக்கக் கோரி இன்று 2013.01.04 தாறுஸ்ஸலாம் பகுதி மக்கள் கொட்டும் மழைக்கும் மத்தியில் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
ஜனாஸா அறிவித்தல்
தகவல்: மகன் M.H. சத்ரி. புதிய காத்தான்குடி பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல் மஹல்லாவினில் வசித்து வந்த சகோதரா் M.ஹனீபா அவா்கள் ( முன்னாள் பல நோக்குக் கூட்டுறவுச் சங்க முகாமையாளர்) 04.01.2013 வெள்ளிக்கிழமை பி.ப. 02.00 மணியலவில் காலமானார்கள். இன்னாலிலாஹி வயின்னா இலைஹி றாஜிஊன்.
-
பாதாம் பருப்பில் அடங்கி உள்ள மருத்துவ குணங்கள்!
இரத்தத்திற்கு நன்மை செய்யும் எச்.டி.எல். கொலஸ்டிரால் அதிகரிக்கவும் கேடு செய்யும் கொலஸ்டிரால் குறையவும் தின…மும் பாதாம்பருப்பு 25 கிராம் சாப்பிட வேண்டும்.
-
1,88,750 கிலோ சீனியில் மண்; பரிசோதனையில் ஊர்ஜிதம்
நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது மணல் கலப்படம் செய்யப்பட்ட 1,88,750 கிலோ சிவப்புச் சீனி கைப்பற்றப்பட்டுள்ளது. கொழும்பு சேதவத்தையிலுள்ள தனியாருக்குச் சொந்தமான களஞ்சிய சாலையொன்றை சுற்றிவளைத்த போதே இறக்குமதி செய்யப்பட்டிருந்த இந்த கலப்படம் செய்யப்பட்ட சீனி மூடைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக கூட்டுறவு அமைச்சு தெரிவித்தது.
-
“உயிர்வாழ ஆசைப்படுகிறேன்; என்னைக் காப்பாற்றுங்கள்…!”
‘நான் உயிர் வாழ ஆசைப் படுகிறேன். என் னைக் காப்பாற்றுங்கள், குற்றவாளிகளை தப்பிக்க விடாதீர்கள்’ டெல்லியில் சின்னாபின்னமாக்கப்பட்ட மருத்துவ மாணவியின் உருக்கமான வேண்டுகோள், இந்தியாவை மட்டுமல்லாமல் உலக அரங்கு, ஐ.நா. சபையையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் காற்றுடன் கூடிய தொடர் மழை: கரையோர மக்கள் பதட்டம்!
விசேட நிருபர். மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக பெய்து வரும் தொடா் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாகப் பாதிக்கப் பட்டுள்ளதுடன் வீதிகள் பல நீரினால் மூழ்கியுள்ளன.