-
தடயங்கள்….
ரிசானா நபீக் இன் விடுதலைக்காக கொழும்பு சவுதி அரேபிய தூதரகத்திற்கு முன் அன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் ஓர் காட்சி! ஜாதி, மதமற்ற ஓர் மனிதாபிமான போராட்டத்தில் திரண்டிருந்த மக்கள் ரிசானாவின் விடுதலைக்காக போராடி குரல் கொடுத்த போது…..
-
ரிசானா நபீக்கை சவூதி அரசு காட்டுமிராண்டித்தனமாக படுகொலை செய்துள்ளது
-ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் – FM. பர்ஹான் இலங்கை பணிப்பெண் ரிசானா நபீக்கை சவூதி அரசாங்கம் காட்டுமிராண்டித்தனமாக படுகொலை செய்துள்ளது. வயது குறைந்த நிலையில் வேலைக்கு அமர்த்தப்பட்ட ரிசானா செய்ததாக சொல்லப்படும் குற்றம் தொடர்பில் தெளிவற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது பராமரிப்பில் இறந்த குழந்தையின் மரணம் ஒரு கொலையா அல்லது விபத்தா என்ற சந்தேகம் உலகம் முழுக்க நிலவுகிறது.
-
எமது ஆழ்ந்த அனுதாபங்கள்
இன்று (09/01/2013) சவுதி அரேபியாவில் தூக்கிலிடப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட பணிப்பெண் ரிஸானா நபீக் இன் மரணச் செய்தி கேட்டு உலக மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்!
-
ரிசானா நபீக் மரண தண்டனை: ஜனாதிபதி மஹிந்த கண்டனம்
பல சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று தூக்கிலடப்பட்டு கொலை செய்யப்பட்ட ரிசானா நபீக் எனும் பணிப்பெண்ணின் மரணத்திற்கு மனித உரிமை அமைப்புக்கள், உலக செய்தி ஊடகங்கள் மற்றும் மனிதாபிமான அமைப்புக்கள் என்பன கடும் கன்டணங்களை வழங்கி வரும் இந்நேரத்தில் இலங்கையைச் சேர்ந்த ரிசானா நபீக்குக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றபட்டது குறித்து இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
ஹிஸ்புல்லாஹ் பாலர் பாடசாலையின் புதிய மாணவா்கள் அனுமதி
டீன் பைரூஸ். புதிய காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் பாலர் பாடசாலையின் 2013 ம் ஆண்டுக்கான புதிய மாணவா்களை வரவேற்கும் நிகழ்வு (09.01.2013 புதன்கிழமை) பணிப்பாளர் அல்ஹாஜ்.HMM.பாக்கீர் BA.JP அவா்களின் தலைமையில் நடை பெற்றது.
-
ரபீவுல் அவ்வல் மாதமும் முஸ்லிம்களும்
– மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ ரபீவுல் அவ்வல் மாதம் வந்தாலே முஸ்லிம்களில் சிலருக்கு பெரும் மகிழ்ச்சியும் சந்தோசமும் வந்துவிடும். காரணம் இது நபி(ஸல்) அவர்கள் பிறந்த மாதம். இது அருள் நிறைந்த மாதம். உலகத்தை ஒளிபெறச் செய்யும் மாதமுமாகும், ஆகவே இந்த மாதத்தை கொண்டாடும் மாதமாக எடுத்துக் கொள்வது நபி(ஸல்) அவர்களை நேசிக்கும் அடையாளமாகும் என்று எண்ணி மீலாது விழாக்களும் மெளலிது ஷரீபுகளும்(?) வெகு கோலாகலமாக பல முஸ்லிம்களின் வீடுகளிலும் பள்ளிகளிலும் நடைபெறும். இஸ்லாத்திற்கும் இச்செயலுக்கும் என்ன…
-
கல்முனை மாநகர முதல்வரினால் காலாவதியான பொருட்களை விற்பனை செய்த வியாபார நிலையங்கள் முற்றுகை: உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
– பழுளுல்லாஹ் பர்ஹான் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட உணவு கையாளும் நிலையங்களில் காணப்பட்ட சமைப்பதற்கு உதவாத உணவுப் பொருட்கள் மற்றும் காலாவதியான தீன்பண்டங்கள், பழரச போத்தல்கள் என்பன இன்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின்போது கைப்பற்றப்பட்டன.
-
மன்னிக்க மனமில்லை: ரிசானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது!
-MJ 1988ம் வருடம் பிறந்த றிசானாவுக்கு கடவுச்சீட்டில் 03/05/1982 (PP. No. NO331835) என்ற போலியான பிறப்பு திகதியிட்டு ஓரிரு ஆயிரம் ரூபாய்களுக்கான நப்பாசையில் றிசானாவின் வெளிநாட்டு முகவரின் இந்த தப்பான ஓர் ஏற்பாட்டில் வறுமைக் கோட்டுக்கும் கீழ் வாழ்ந்து கொண்டிருக்கும் ஓர் குடும்பத்தின் கனவு இன்று பாலைவனத்தில் குழி தோண்டி புதைக்கப்பட்டிருக்கின்றது.
-
இராணுவ தமிழ் யுவதிகள்!
இராணுவத்தில் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட கிளிநொச்சி பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் யுவதிகள் ஒருவார கால சுற்றுலா பயணமாக கொழும்பு வருகை தந்துள்ளனர்.
-
‘திவிநெகும’ சபையில் நிறைவேற்றம்
2/3 பெரும்பான்மை வாக்குகள் ஆதரவு 160, எதிர் 53 ‘திவிநெகும’ வாழ்வெழுச்சி சட்டமூலம் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் திருத்தங்களுடன் நேற்று பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது. சட்டமூலத்துக்கு ஆதரவாக 160 வாக்குகளும், எதிராக 53 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதற்கமைய 107 மேலதிக வாக்குகளால் திவிநெகும சட்டமூலம் பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்டது.
-
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் வெள்ள அனர்த்த்தினால் பாதிக்கப்பட்ட மட்டு- மஞ்சந்தொடுவாய் மக்களுக்கு நிவாரணப்பொதிகள் வழங்கிவைப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் கிழக்கு மாகாணத்தில் பல்வேறு அரசியல் சமூக வேலைத் திட்டங்களை முன்னெடுத்துவரும் காத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் அடைமழை காரணமாக பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு வெள்ள நிவாரணப் பொதிகள் வழங்கும் நிகழ்வின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று செவ்வாய்கிழமை மாலை மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் முஹைத்தீன் ஜூம்மா பள்ளிவாயல் வளாகத்தில் இடம்பெற்றது.
-
கல்முனை அல்-சுஹறா வித்தியாலயம் ஒரு அடி வெள்ளத்தில்
– பழுளுல்லாஹ் பர்ஹான் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக கல்முனை அல்-சுஹறா வித்தியாலயம் ஒரு அடி வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் பாடசாலை மாணவ மாணவிகளின் கல்வி நடவடிக்கை பாதிக்கப்பட்டிருந்தது. கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் நேற்று (08.01.2013) நேரில் சென்று பார்வையிட்டு வெள்ள நீரை வெளியேற்ற தேவையான நடவடிக்கையினை மேற்கொண்டார்.