-
சவூதி அரேபியாவில் தடைவிதிக்கப்படும் இலவச தொலைத்தொடர்பு மென்பொருட்களும் அவற்றுக்கான காரணங்களும்…
-MJ றியாத்: உலகப் புகழ்வாய்ந்த சமூக வலைத்தளங்களில் இன்று பிரதானமாகத் திகழும் ஸ்கைப் (Skype), வைபர் (Viber) மற்றும் வட்ஸ்அப் (Whatsapp) ஆகிய இலவச தொடர்பாடல் மென்பொருட்களின் சேவைகளை சவூதி அரேபியா ஒரு வாரத்துக்குள் தடைசெய்ய இருப்பதாக அறிவித்திருக்கின்றது.
-
ஓ.எஸ்.ஏ அமைப்பினால் விதவைகளுக்கு இலவசமாக குளாய்க் குடிநீர் இணைப்பு வழங்கும் நிகழ்வு
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் ‘ஏழை மக்களின் வளமான வாழ்விற்கு வழிகோலுவோம்” எனும் வேலைத்திட்டத்தின் கீழ் கணவனை இழந்த விதவைகளுக்கு இலவசமாக குளாய்க் குடிநீர் இணைப்பு வழங்கும் நிகழ்வு எதிர்வரும் வெள்ளிக்கிழமை புதிய காத்தான்குடி பஸ் டிப்போவுக்குள் அமைந்துள்ள செஞ்சிலுவைச் சங்க கட்டடத்தில் காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் தலைவர் இல்மி அஹமட் லெப்பை தலைமையில் நடைபெறவுள்ளதாக காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் இணைச் செயலாளர் மஸ்ஊத் (ஹாஸிமி) தெரிவித்தார்.
-
மகளிருக்கான மாபெரும் இஸ்லாமிய கருத்தரங்கு
-பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு காத்தான்குடி லஜ்னதுஸ் ஸுன்னா அந்நபவிய்யாவும் காத்தான்குடி பிரதேச கலாசார மத்திய நிலையமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள மகளிருக்கான மாபெரும் இஸ்லாமிய கருத்தரங்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை 29.03.2013 பிற்பகல் 04.00 மணியளவில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக காத்தான்குடி லஜ்னதுஸ் ஸுன்னா அந்நபவிய்யாவின் சிரேஸ்ட உறுப்பினரும் மஃஹதுஸ் ஸுன்னா பெண்கள் அரபுக் கல்லூரியின் அதிபருமான அஸ் ஸெய்க் ஸைனுல் ஆப்தீன் (மதனி) தெரிவித்தார்.
-
ஈச்ச மரத்து இன்பச் சோலையில்..
(படங்கள் FM. பர்ஹான்) காத்தான்குடி: காத்தான்குடி பிரதான வீதியில் நடப்பட்டிருக்கும் ஈச்ச மரங்கள் தற்பொழுது காய்க்கத் தொடங்கி இருக்கின்றன. அவற்றின் அழகிய தோற்றத்தின் மேலதிக படங்களை எமது வெளியூர் மற்றும் கடல் கடந்து வாழும் அன்பு வாசகர்களுக்காக பிரசுரிக்கப்படுகிறது.
-
சஊதியில் தீ விபத்து: 7பேர் பலி!
-MJ றியாத்: றியாத் நகலிரிருந்து 750 கி.மீ தூரத்திலிருக்கும் ஆயான் எனும் ஊரில் இன்று காலை இடம்பெற்ற தீ விபத்தில் 7 இந்தியர்கள் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் இந்தியா, மலையாளிகள் என உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
-
கடந்த 50 வருடங்களுள் பிரித்தானியாவில் தொடரும் மிக மோசமான குளிர் காலநிலை: இயல்புநிலை பாதிப்பு!
பிரித்தானியா: பிரித்தானியாவின் நேரக்காட்டி (கலண்டர்) காலத்தின்படி தற்பொழுது இலைதுளிர் காலம் (Spring) ஆரம்பித்திருக்கின்றது. கடந்த 3 மாதங்கள் உறைபனியில் மோசமான காலநிலையைச் சந்தித்து வெயிலுக்காக் காத்திருக்கும் இந்த மார்ச் மாத முடிவிலும் அங்கு வெயில் கிடைக்காமல் மக்கள் ஏமாற்றமடைந்திருக்கின்றனர். கடுமையான குளிரின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கின்றது.
-
211 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம்: 1000 பேருக்கு காணி உறுதிப்பத்திரம்
அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த 211 பயிலுநர் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனங்களும், காணி உறுதிப்பத்திரமற்ற 1000 பேருக்கு காணி உறுதிப்பத்திரமும் நேற்று வழங்கி வைக்கப்பட்டன.
-
15 வயதுக்கு குறைவான மாணவர்கள் மரதன் ஓடுவதற்கு அரசு தடை
அமைச்சரவை அங்கீகாரம்: விளையாட்டுத்துறை மருத்துவப்பிரிவு நேற்று உத்தியோகபூர்வ அறிவிப்பு பதினைந்து வயதுக்குக் குறைவான மாணவர்களை மரதன் போட்டிகளிலோ கிராமங்களினூடாக ஓடும் போட்டிகளிலோ ஈடுபடுத்துவதை தடை செய்துள்ளதாக விளையாட்டு மருத்துவ பிரிவு தெரிவித்தது.
-
தஹெட்ட கிருல தேசத்துக்கு மகுடம் 2013 வேலைத் திட்டத்தின் கீழ் காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் அம்பியுலன்ஸ் வண்டி கையளிப்பு
காத்தான்குடி: தஹெட்ட கிருல தேசத்துக்கு மகுடம் 2013 வேலைத் திட்டத்தின் கீழ் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் வேண்டுகோளின் பேரில் வழங்கிவைக்கபட்ட புதிய அம்பியுலன்ஸ் வண்டி பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் இன்று திங்கட்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.
-
காத்தான்குடி மண்ணுக்கு பெருமை தேடித்தரும் ஈத்த மரங்கள் காய்க்க ஆரம்பித்துள்ளன
– டீன் பைரூஸ். காத்தான்குடி: அரேபிய மண்ணுக்க அழகை கொடுப்பதில் ஈத்த மரங்களின் பங்கு கனிசமானது. அவ்வாறுதான் காத்தான்குடி மண்ணுக்கும் அப்படியான ஈத்த மரங்கள் அழகை கொடுத்துக் கொண்டிருக்கின்றது.
-
காத்தான்குடி குர்ஆன் சதுக்கத்திற்கு ஈரானிலிருந்து மாபிள்கள் இறக்குமதி-பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நடவடிக்கை
பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் வீதியை அழகுபடுத்தும் விஸேட வேலைத்திட்டத்தின் கீழ் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் அயராத முயற்சியின் பயனாக மட்டக்களப்பு-கல்முனை காத்தான்குடி பிராதான வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ள காத்தான்குடி குட்வின் சந்தி குர்ஆன் சதுக்கமாக மாற்றம் பெற்று வருகின்ற அதே வேளை அங்கு பாரிய அளவில் மிகவும் எழில்மிக்க சுற்றுவட்டம் (ரவுண்ட போட்) நிறுவப்பட்டு வருகின்றது.
-
யூ.எல்.எம்.என்.மூபீனின் வேண்டுகோளின் பேரில்; ஆறு பேருக்கு சமாதான நீதவான் நியமனம்
FM. பர்ஹான் காத்தான்குடி: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய கொள்கை பரப்பு செயலாளரும், உற்பத்தி திறன் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சின் மக்கள் தொடர்பு அதிகாரியுமான யூ.எல்.எம்.என். மூபீன்.BA/JP வேண்டுகோளின் பேரில் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமின் சிபாரிசில் நீதி அமைச்சினால் வழங்கி வைக்கப்பட்ட மூன்று அகில இலங்கை சமாதான நீதவான் நியமனக்கடிதமும் மூன்று மட்டக்களப்பு நீதி நிர்வாக வலயத்திற்கான சமாதான நீதவான் நியமனக்கடிதங்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை உற்பத்தி திறன் அபிவிருத்தி அமைச்சின்;…