மாத்தளை: நேற்றுவரை அரசாங்கம் வழங்கிய சகலவி தமான சலுகைகளையும், வளங்களையும் ஒன்றுவிடாது அனுபவித்துவிட்டு இன்று எதிரணிக்குச் சென்ற மன்னார் முனாபிக் ஒருவர் இந்த அப்பாவியான அஸ்வருக்கும் நயவஞ்சக துரோகம் இழைத்துள்ளார் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
மாத்தளையில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டமொன்றில் கலந்து கொண்டுரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். சகலதையும் அனுபவித்துவிட்டு ஒரே நாளில் கட்சி மாறிச் செல்ல இவர்களுக்கு எப்படித்தான் மனம் வருகிறதோ தெரியவில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இவர் போன்றவர்களால் அவரது சமூகத்திற்கே இழுக்கு ஏற்படுகிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். எமக்கு உறுதுணையாக இருந்த அஸ்வர் அவர்களது பாராளுமன்ற ஆசனத்தை நயவஞ்சகமாக அபகரித்தது மட்டுமல்லாது அதற்கு வியாக்கியானம் வேறு கூறித்திரிகிறார்கள். இவர்களை “முனாபிக்” என்று அழைப்பதில் தவறில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
Published by
![mahinda_rajapaksa_addresses[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/08/mahinda_rajapaksa_addresses1.jpg?w=150&h=107)
Leave a reply to nizamhm1944 Cancel reply