-
மஜீத்புரம் பள்ளிவாசல் நிர்வாகிகள் தன்னிச்சையாக நடக்கும் அவலம் : வக்பு சபை, கலாச்சார திணைக்களம் தலையிட்டு தீர்வை பெற்றுத்தர மக்கள் கோரிக்கை !
– நவாஸ் ஸாஜித் சம்மாந்துறை: அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஜீத்புரம் ஜும்மாப்பள்ளிவாசல் நிர்வாகிகள் தொடர்ந்தும் நிர்வாக முறைகேடுகளை மேற்கொண்டு வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் ஊடகங்களுக்கு தெரிவித்தனர். திருமண அனுமதிக்கடிதம் வழங்குவது முதல் பல்வேறு முறைகளிலும் இவர்களின் அதிகாரத் துஷ்ப்பிரயோகமும், நிர்வாக முறைகேடுகளும் இடம்பெற்று வருகின்றது.
-
ஞானசார தேரருக்கு எதிராக முஸ்லிம் எம்.பிக்கள் முறைப்பாடு
– நூருள் ஹுதா உமர் முஸ்லிங்கள் மீது அவதூறு பரப்பும் விதமாகவும் இறைவனை நிந்திக்கும் விதமாகவும் சிங்கள தனியார் ஊடகமொன்றின் அரசியல் விவாத நிகழ்ச்சியில் கருத்து தெரிவித்த பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், பைசல் காசிம், அல்ஹாபிழ் இசட். நஸீர் அஹமட், எம்.எஸ். தௌபீக், அலிசப்ரி ரஹீம், சட்டத்தரணி முஸாரப் முதுநபின், இசாக் ரஹ்மான் ஆகியோர் பொலிஸ்…
-
குருடனை பார்த்து கண்ணை முழி என்றால் எவ்வாறு முழிப்பது ? எமது உறுப்பினர்களின் இயலாமைக்கு என்ன காரணம் ?
பாராளுமன்ற உறுப்பினர் சாணாக்கியன் மட்டுமல்ல தமிழ் உறுப்பினர்கள் போன்று சமூகத்திற்காக வீரத்துடன் அச்சப்படாமல் பேசுகின்ற அல்லது போராட்ட குணமுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம் சமூகத்தில் இல்லையா ? அவ்வாறானவர்களை ஏன் எங்களால் தெரிவுசெய்ய முடியவில்லை என்பதுதான் இன்று மக்கள் மனங்களிலும் எழுகின்ற கேள்வியாகும்.
-
‘20’க்கு சோரம்போன சோனக அரசியல்வாதிகளுக்கு சமர்ப்பணம்
இன்றைய தினம் பாராளுமன்றத்தில். ஜனாதிபதி, பிரதமருக்கு எதிராக மக்கள் கோஷமிட காரணம் என்ன? நாங்கள் பார்த்தோம் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ இத்தாலிக்கு விஜயம் செய்திருந்த போது, மக்கள் அவருக்கு எதிர்ப்பினை தெரிவித்து கோசங்களை எழுப்பியிருந்தனர். இந்தநிலையில் அமெரிக்காவிற்கு சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராகவும் கோஷங்களை எழுப்ப மக்கள் தயாராகிக் கொண்டிருப்பதாக நாங்கள் அறிகின்றோம்.
-
அக்கரைப்பற்று அனைத்து நிறுவனங்கள் சம்மேளன கூட்டம் : பள்ளிவாசல்கள் நிராகரித்தது !
மாளிகைக்காடு நிருபர் அக்கரைப்பற்று: அக்கரைப்பற்று அனைத்து நிறுவனங்கள் சம்மேளனத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள எதிர்கால மக்கள் நலத்திட்டங்கள் பற்றி ஆராயும் துறைசார்ந்த முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல் அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி தலைமையில் மாநகர சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
-
அஷ்ரபின் மரணம் சதியா ? விபத்தா ? விசாரணை அறிக்கை ஏன் வெளிப்படுத்தப்படவில்லை ?
2000.09.16 அன்று சனிக்கிழமை காலை 9.05 மணிக்கு சோவியத் தயாரிப்பான எம்.ஐ 17 ரக உலங்கு வானூர்தியில் பம்பலப்பிட்டி பொலிஸ் மைதானத்திலிருந்து தலைவர் அஸ்ரப் மற்றும் விமான ஓட்டிகள் உட்பட 13 பேர்களுடன் அம்பாறையை நோக்கி பயணித்தனர்.
-
த.தே.கூட்டமைப்பு என்னும் பல கட்சிகள் ஒரே கொள்கையிலும், மு.காஎன்னும் ஒரு கட்சி பல கொள்கையிலும் பயனிப்பதேன் ?
தமிழரசு கட்சியை பிரதானமாகக் கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பில் அரசியல் கட்சிகளும், முன்னாள் போராட்ட இயக்கங்களும் உள்ளன. அதாவது பல கட்சிகளை உள்ளடக்கிய ஓர் கூட்டணிதான் தமிழ் தேசிய ஊட்டமைப்பாகும்.
-
பொதுமுடக்கம் காரணமாக தொற்றாளர்கள் எண்ணிக்கையில் வீழ்ச்சி
நூருல் ஹுதா உமர், பாறூக் சிஹான், எம்.என்.எம். அப்ராஸ் அக்கரைப்பற்று: கொரோனா ஆரம்பித்த சீனா, இலங்கையில் அதிகமான கொரோனா நோயாளர்கள் அடையாளப்படுத்தப்பட்ட பெலியகொட கிழக்கில் அக்கரைப்பற்று என கொரோனா தொற்றாளர்கள் அதிகமாக மீன்சந்தைகளிலையே அடையாளம் காணப்பட்டனர்.
-
கோவிட்: இங்கிலாந்து v இந்தியா 5வது முக்கிய டெஸ்ட்போட்டி இரத்து
மன்செஸ்டர்: இந்திய வீரர்கள் சிலருக்கும், பிரதான மற்றும் இதர பயிற்சியாளர்களுக்கும் கோவிட் தொற்று பொசிடிவ் – நேற்று வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, மன்செஸ்டரில் இன்று இடம்பெறவிருந்த இங்கிலாந்து v இந்தியா 5வது முக்கிய டெஸ்ட்போட்டி இரத்து செய்யப்படுகிறது.
-
Bபிரிட்டனின் இளம் டென்னிஸ் வீராங்கனை
லண்டன்: பதினெட்டு வயதே நிரம்பிய Bபிரிட்டனைச் சேர்ந்த Emma Raducanu அமெரிக் ஓபன் டென்னிஸ் சுற்றில், சுவிஸ் வீராங்கனை Belinda Bencic ஐ, தோற்கடித்து, அரை இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறார்.
-
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை கொரோனா பிரிவுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைப்பு
– நூருல் ஹுதா உமர் கல்முனை: கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு சுமார் 25 லட்சம் ரூபாய் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் கடல் கடந்து வாழ் கல்முனை உறவுகளினால் இன்று வழங்கி வைக்கப்பட்டது. நாட்டில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர், அம்பாறை மாவட்டம் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அமையப்பெற்றுள்ள கொரோனா தடுப்பு சிகிச்சை நிலையத்திற்கு சில மருத்துவ உபகரணங்களின் அவசியத் தேவை கருதி வைத்தியசாலையினால்…
-
போர்க்கள ஆய்வு
ஒரு நாட்டை கைப்பற்றுவதென்றால், அந்நாட்டின் இராணுவ கட்டளை மையங்கள், கேந்திர முக்கியத்துவமிக்க இடங்களை முதலில் கைப்பற்ற வேண்டும். அல்லது செயலிழக்க செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே ஏனைய பிரதேசங்கள் இலகுவாக வீழ்ந்துவிடும்.