-
48 மணி நேரத்தில் பட்டினியால் 110 பேர் பலி: சோமாலியாவில் சோகம்!
மொகதிஸூ: சோமாலியாவில் கடும் பஞ்சம் நிலவிவரும் நிலையில், கடந்த 48 மணிநேரத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து மட்டும் பட்டினியால் 110 பேர் பலியாகியிருப்பதாக அந்நாட்டின் பிரதமர் ஹசன் அலி ஹைரே தெரிவித்துள்ளார். தென் மேற்கு பே பகுதியில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது நிலவிவரும் நெருக்கடியான காலக்கட்டத்தில் வெளியாகும் முதல் அதிகாரப்பூர்வ உயிரிழப்பு எண்ணிக்கை இது.
-
தான் ஹசனலியுடன் இணைய வேண்டிய எந்தவொரு தேவைப்பாடும் கிடையாது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்.
காத்தான்குடி: ஷிப்லி பாறுக் ஹசனலியுடன் இணைய முஸ்தீபு முக்கியஸ்தர்கள் பலரும் பேச்சு எனும் தலைப்பில் இணையத்தளம் ஒன்றில் போலியான செய்தி ஒன்று பிரசுரிக்கப்பட்டுள்ளது. இதற்கு தனது மறுப்பை தெரிவிக்கும் வகையிலேயே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
-
இலங்கை அரசின் செயல்பாடுகள் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையம் அதிருப்தி
ஜெனீவா: இலங்கையில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட நிலை, நீதி கிடைப்பதற்காக மேற்கொள்ளப்படும் மந்தகதியிலான நடவடிக்கை மற்றும் முந்தைய குற்றங்களுக்கான பொறுப்புக் கூறல் குறித்து ஒருங்கிணைந்த அணுகுமுறை இல்லாமை ஆகிய காரணங்களால் தடம் புரளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக ஐ.மா. மனித உரிமை ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பாதிக்கப்பட்ட ஹசன் அலி நிந்தவூரில் ரவூப் ஹக்கீமிற்கு எதிராக ஆற்றிய உரையின் முழு நேர காணொளி
– ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்
-
வெற்றிகரமாக ஆரம்பமான ஹக்கீமுக்கு எதிரான ஹசன் அலியின் நிந்தவூர் கூட்டம்
ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் நிந்தவூர்: முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் மட்டுமல்லாது பெரும்பான்மை சமூகம் பெரும்பான்மை கட்சிகள், தேசியம், சர்வதேசம் என எதிர்பார்புடன் இருந்த முஸ்லிம் காங்கிரசின் தலைமையின் சர்வதிகார போக்கிற்கு எதிராக கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் ஹசன் அலியினால் நேற்று 03.03.2017 நிந்தவூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை பரவலாக எலோரும் அறிந்த விடயமாகும்.
-
கிழக்கு மாகாண அரச திணைக்களங்களின் கூட்டங்களில் மது பரிமாறல்: பெண் அதிகாரிகளும் பங்கேற்பு!!
மட்டக்களப்பு: கிழக்கு மாகாணத்தின் பல அரச திணைக்களங்களில் மதுவுடன் கூடிய விருந்து நிகழ்வு ஒன்று நடைபெற்ற சந்தர்ப்பத்தில், குறித்த விருந்துபசார நிகழ்வில் அரச அதிகாரிகள் ஆண்களுக்கு நிகராக பெண்களும் மது போத்தலுக்கு முன்பாக அமர்ந்து இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. குறித்த புகைப்படம் கிழக்கு மாகாணத்தில் உள்ள அரச திணைக்களங்களில் பணி புரியும் அரச அதிகாரிகள் என தெரியவருகின்ற நிலையில், கிழக்கு மாகாணத்தின் இன்றைய நிலை பற்றிய சிந்தனை அனைவர் மத்தியிலும் அதிகம் பேசப்படுகின்றது.
-
பிரித்தானியாவில் புதிய சட்டம் அமுல்
லண்டன்: பிரித்தானியாவில் வாகனம் ஓட்டும்போது ஓட்டுனர்கள் செல்போன் பயன்படுத்தினால் 200 பவுண்ட் அபராதம் விதிக்கப்படும் புதிய சட்டம் 01/03 முதல் அமலாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வாகனங்கள் ஓட்டும்போது செல்போன்கள் பயன்படுத்துவதால் விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புக்கள் அதிகரித்து வருகின்றன.
-
மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்ட லண்டன்
லண்டன்: பிரித்தானியாவின் தலைநகர் லண்டன் நகரமே இதுவரையில் வாழ்க்கை செலவு அதிகமான நகர பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருந்தது. இந்நிலையில் தற்போது மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. செவில்ஸ் என் எஸ்டேட் நிறுவனத்தின் ஆய்விற்கமைய நிவ்யோர்க் மற்றும் ஹொங்கொங் முதலாம், இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
-
“அவசரப்பட்டு அறிக்கைகள் இட்டு மக்கள் மத்தியில் பிழையான எண்ணங்களை தோற்றுவிக்கக்கூடிய பிழையான அரசியல் கலாச்சாரம் மாற வேண்டும்”-ஷிப்லி பாறுக்
– எம்.ரீ. ஹைதர் அலி காத்தான்குடி: காத்தான்குடி ஊர் வீதியினுடைய புனரமைப்பு பணிகள் தனது முயற்சியினால்த்தான் நிதி ஒதிக்கீடு மேற்கொள்ளப்பட்டு வீதி அபிவிருத்தி பணிகள் நடைபெறுவதாக எந்தவொரு நிகழ்விலும் நான் தெரிவிக்கவில்லை என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்தார்.
-
ஐரோப்பிய நாடுகளுக்கு பயணிக்கும் அமெரிக்கர்களுக்கு விசாவை கட்டாயமாக்க முயற்சி
லண்டன்: ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்யும் அமெரிக்க பிரஜைகள், விசா பெற வேண்டிய நடைமுறையை ஏற்படுத்த வேண்டும் என ஐரோப்பிய நாடாளுமன்றம், ஐரோப்பிய ஆணையத்தை கேட்டுக் கொண்டுள்ளது. ஐரோப்பிய ஆணையம், இரண்டு மாதங்களில் இந்த நடவடிக்கையை அமல்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
காத்தான்குடி ஊர் வீதி புனரமைக்கும் பணிகள் ஆரம்பம்
காத்தான்குடி: மிக நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த காத்தான்குடி ஊர் வீதியினுடைய புனரமைப்பு பணிகள் நேரடியாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மூலமாக தற்போது மீண்டும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. காத்தான்குடியிலுள்ள மிகப் பிரதான வீதிகளுள் ஒன்றான காத்தான்குடி ஊர் வீதியானது நீண்ட நாட்களாக புனரமைப்பு செய்யப்பட்டு பூரனப்படுத்தப்படாத நிலையில் காணப்பட்டதனால் இவ்வீதியினூடாகவும், வீதியில் காணப்படும் குறுக்கு வீதிகளினூடாகவும் பயணிக்கும் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்கி வந்தனர்.
-
யாழ்ப்பானம் வேம்படி மகளிர் பாடசாலை மாணவிகளின் விஜயம்
பா.திருஞானம் கொழும்பு: யாழ்ப்பானம் வேம்படி மகளிர் பாடசாலை மாணவிகள் சுற்றுலா நோக்குடன் கொழும்பு வந்திருந்தபோது கல்வி அமைச்சுக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டு கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் அவர்களை சந்தித்தார்கள். இந் சந்திப்பில் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் பாடசாலையின் அதிபர் ஆசிரியர்கள் கலந்துக் கொண்டார்கள்.