-
19 வகையான குழந்தைகள் பால்மா விலைகள் குறைப்பு
குழந்தைகளுக்கான பால்மாக்களின் விலைகளை அரசாங்கம் குறைத்துள்ளது. உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நேற்று நள்ளிரவுமுதல் 19 வகையான குழந்தைகள் பால்மாக்களின் விலைகள் குறைக்கப்பட்டிருப்பதாக கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துறை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நேற்றுத் தெரிவித்தார்.
-
ஐரோப்பா கிண்ணம்: குழு ‘சி’ ஸ்பெயின், இத்தாலி கால் இறுதிக்குத் தெரிவு!
வெற்றி தோல்வியின் விளிம்பில் இருக்கும் இங்கிலாந்துக்கு இன்று ‘ரூணி’ களமிறங்குகிறார்! -MJ நேற்றிரவு நடைபெற்று முடிந்த குழு ‘சி’ இற்கான ஐரோப்பாக் கிண்ணப் போட்டியில் இறுதி நேரத்தில் ஸ்பெயின் இட்ட கோல் ஒன்றால் இரண்டாமிடத்திலிருந்த குரோசியா பரிதாபத் தோல்வியைத் தழுவி 1:0 என்ற கோல் வெற்றியில் ஸ்பெயின் ‘சி’ குழுவில் முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டது.
-
இலங்கை அபார வெற்றி: தொடரையும் வென்றது!
-MJ நேற்றிரவு நிறைவடைந்த இலங்கை-பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 5வது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் 248 எனும் பாகிஸ்தானின் ஓட்ட இலக்கை இலங்கை அணி இறுதி ஓவரில் 2 பந்துகள் மீதமிருக்க அபார வெற்றியீட்டி 3:1 எனும் தொடர் வெற்றியைப் பெற்றுக் கொண்டது.
-
இலங்கை வங்கி வரலாற்று சாதனை: ஒரு ரில்லியன் ரூபா இலக்கை எட்டியது
வரலாற்றில் முதன்முறையாக இலங்கை வங்கி, ஐந்தொகையில் ஒரு ரில்லியன் ரூபா என்ற பாரிய இலக்கை அடைந்துள்ளது. 2012ஆம் ஆண்டு இறுதியில் இந்த இலக்கை அடைவதற்கு எதிர்பார்த்திருந்தபோதிலும் மே மாதம் 31ஆம் திகதியே இந்த இலக்கை அடையமுடிந்திருப்பதாக இலங்கை வங்கியின் தலைவர் கலாநிதி காமினி விக்ரமசிங்க தெரிவித்தார்.
-
சிரேஷ்ட அமைச்சர் பௌசியின் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை – ஹிஸ்புல்லாஹ்
சிரேஷ்ட அமைச்சர் பௌசியின் பெயரை நீக்கிவிட்டு தலைவர் மர்ஹும் அஸ்ரப் அவர்களின் பெயரை பொறித்ததாக தெரிவித்துள்ள கருத்து முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என தெரிவித்துள்ள சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, என்னைப்பற்றி தெரிவித்த அனைத்து கருத்துக்களும் உண்மைக்கு புறம்பானது எனவும் தெரிவித்தார்.
-
கிழக்கு தேர்தல்: முஸ்லிம் காங்கிரஸ் யாருடன் கூட்டு?
-BBC/Tamil இலங்கையில் நடை பெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஏனைய கட்சிகளுடனான தேர்தல் கூட்டணி தொடர்பான எந்தவிதமான இறுதி முடிவும் பொத்துவில் நகரில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் எட்டப்படவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி கூறியுள்ளார். பொத்துவில் நகரில் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் விசேட கூட்டத்தில் கிழக்கு மாகாண சபை தேர்தல் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.
-
ஏறாவூரிலும் அரசியல் காடைத்தனம்!
ஏறாவூர் நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் இன்று 18ம் திகதி திங்கட்கிழமை காலை திறக்கப்படவிருந்த அபிவிருத்திப் பணிகளுக்கான நினைவுக்கல் மற்றும் பெயர்ப்பலகைகளை இனந்தெரியாத நபர்கள் நிறப்பூச்சு பூசி சேதமாக்கியுள்ளனர். இன்று திங்கட்கிழமை காலை ஏறாவூர் நகரில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைரின் வேண்டுகோளின் பேரில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் உதுமாலெப்பையினால் 8 கோடி ரூபா செலவில் ஆரம்பிக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்களுக்கான நினைவுக்கல் மற்றும் பெயர்ப்பலகைகள் மீதே இவ்வாறு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
-
ஜபல் நகர் மூணாங்கட்டை மலையில் திடீரென முளைக்கும் பௌத்த விகாரை!
-Adaderana கடந்த 2012.06.08 வெள்ளி மு.ப.11.00 மணியளவில் 64ம் கட்டை ஜபல் நகரில் அமைந்துள்ள மூணாங்கட்டை மலை தொடர்பில் எவ்வித முன்னறிவித்தலும் இன்றி சேருவில விகாராதிபதி வண. சரணகீர்த்தி நாயக்க தேரோ தலைமையில் வந்த குழு ஒன்று இம்மலைக்கு மேல் பாரிய பௌத்த சிலை ஒன்றை வைப்பதற்கும், பௌத்த விகாரையுடன் கூடிய சில கட்டுமானங்களை அமைப்பதற்கும் ஏற்பாடுகள் நடைபெற்று வேலைகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
ஐரோப்பா கிண்ணம்: குழு ‘பி’ – ஜேர்மனி, போர்த்துக்கல் கால் இறுதிப் போட்டிக்குத் தெரிவு!
-MJ நேற்றிரவு நடைபெற்று முடிந்த குழு ‘பி’ அணிகளுக்கிடையிலான ‘லீக்’ சுற்று போட்டிகளில் ஜேர்மனியை எதிர்த்து டென்மார்க்கும் போர்த்துக்கலை எதிர்த்து நெதர்லாந்தும் விளையாடின. இரு போட்டிகளும் இறுதிவரை பலத்த பலப்பரீட்சைக்கு மத்தியிலேயே நிறைவுபெற்றிருந்தன.
-
காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா பொதுமக்களுக்கு விடுக்கும் அறிவித்தல்.
-அஷ்ஷெய்ஹ்: CMM. அமானி அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹூ எமதூரின் சில பகுதிகளில் மாற்றுமத சகோதரர்கள் சிலரால் 30.05.2012 புதன்கிழமை அன்றும் அதற்கு முன்னரும் ‘ரூஹ் அல்லாஹ்’ எனும் தலைப்பிலான பச்சை நிற சிறு புத்தகம் ஒன்று விநியோகிக்கப்பட்டுள்ளது.
-
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா ஹலால் குழுவில் இணைந்து செயற்படும் கா.குடி ஜம்மிய்யத்துல் உலமா உறுப்பினர்கள்
-அஷ்ஷெய்ஹ்: CMM. அமானி 06.05.2012 கௌரவப் பொதுச் செயலாளர், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, கொழும்பு. அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா ஹலால் குழுவில் இடம்பெறவுள்ள அங்கத்தவர்கள் தொடர்பாக…
-
2ம் தவணை முடிவதற்கு முன்னர் 3000 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம்
-1000 : விஞ்ஞான, கணித பட்டதாரிகள் – 1000 : தொழில் நுட்ப பட்டதாரிகள் – 1000 : ஆங்கில ஆசிரியர்கள்; டிப்ளோமா தாரிகளையும் இணைக்க திட்டம் பாடசாலையின் இரண்டாம் தவணை முடிவடைவதற்கு முன்பாக ஆயிரம் பாடசாலை திட்டத்திற்கென பிரத்தியேகமாக மூவாயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்படும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லையென கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தினகரனுக்கு கூறினார்.