-
இஸட் புள்ளி முறைமையை அரசாங்கம் உடனடியாக இரத்துச்செய்ய வேண்டும்:ரணில்
பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான இஸட் புள்ளி முறைமையை உடனடியாக இரத்துச்செய்ய வேண்டும் ௭ன்று அரசாங்கத்திடம் ஐ.தே.க.வின் தலைவரும் ௭திர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். முன்னைய இஸட் புள்ளிகளின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவான மாணவர்களையும் நீதிமன்றத் தீர்ப்பின் பின்னர் மீளாய்வு செய்யப்பட்டு தெரிவான மாணவர்களையும் பல்கலைக்கழகங்களில் இணைத்துக் கொள்ள வேண்டும் ௭ன்றும் அவர் வலியுறுத்தினார்.
-
குற்றப்பரிகாரம் (கஃப்ஃபாரா)
– மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ : இஸ்லாம் நல்ல காரியத்தின் பக்கம் மக்களை நேர்வழி காட்டுகின்றது, தவறுகளிலிருந்து தடுக்கின்றது. அதிலும் பெரும்பாவங்களிலிருந்து முற்றாக தடுக்கின்றது. ஒருவர் தடுக்கப்பட்ட பாவங்களை செய்துவிட்டால், அல்லாஹுவிடத்தில் உண்மையான தவ்பா செய்வதுடன், சில பாவங்களுக்கு குற்றப்பரிகாரத்தையும் வழங்க வேண்டும். குற்றப்பரிகாரம் (கஃப்ஃபாரா) என்பது, பாவம் செய்த ஒருவரின் பாவத்தை தர்மம், தொழுகை இன்னும் அவைகள் போன்றதைக் கொண்டு பரிகாரம் தேடுவதாகும். குற்றப்பரிகாரம், பாவம் செய்தவரின் பாவத்தை போக்குவதால், அதற்கு குற்றப்பரிகாரம் என்று பெயர்…
-
கிழக்குமாகாணசபைத் தேர்தல் 2012: உங்கள் அபிமான கட்சி எது?
உங்கள் வாக்காளர் பதிவை பரீட்சித்துப் பார்க்க பின்வரும் LINK ஐ ‘கிளிக்’ செய்யவும் http://www.slelections.gov.lk/electoral/
-
லண்டன் ஒலிம்பிக் தரவரிசையும் சீனாவின் தொடர் வெற்றிகளைத் தாங்கமுடியாத மேற்கத்தேய ஊடக விமர்சணங்களும்!
-MJ லண்டன் ஒலிம்பிக் போட்டிகள் பலத்த எதிர்பார்ப்புக்களுடன் ஒவ்வொரு நாளும் நடைபெற்று வருகின்றன. நேற்று இரவு 01-08-2012 புதன்கிழமையுடன் நிறைவடைந்த போட்டிகளின் அடிப்படையில் பின்வருமாறு நாடுகள் நிரற்படுத்தப்பட்டுள்ளன.
-
ரவூப் ஹக்கீம், நிஸாம் காரியப்பர், பாயிஸ் ஆகியோருக்கு LLM பட்டம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், மு.கா. பிரதிச் செயலாளர் நாயகமும் கல்முனை மாநகர பிரதி முதல்வருமான நிஸாம் காரியப்பர், மு.கா. சர்வதேச விவகாரப் பணிப்பாளர் ஏ.எம்.பாயிஸ் ஆகிய மூவரும் நேற்று சட்டத்துறையில் சட்ட முதுமாணி (LLM) பட்டத்தைப் பெற்றுள்ளனர்.
-
சரியான நேரத்தில் அதான் ஒலிக்க செய்யுமாறு இலத்திரனியல் ஊடகங்களிடம் கோரிக்கை
நோன்பு துறக்கும் நேரத்தை இலத்திரனியல் ஊடகங்களில் அறிவிக்கும் போது சரியான ஒரே நேரத்தில் சகல ஊடகங்களிலும் அதனை ஒலி, ஒளிபரப்பு செய்யுமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் இலத்திரனியல் ஊடக நிறுவனத் தலைவர்களைக் கேட்டுள்ளது. முஸ்லிம்கள் உரிய நேரத்தில் பாங்கு ஒலியைக் கேட்டு நோன்பு திறக்க இது வசதியாக இருக்குமென்றும், சில நிமிடங்கள் தவறாகக் கணிக்கப்பட்டு “பாங்கு” முன்னும், பின்னுமாக ஒலி, ஒளிபரப்பாகும் நிலையைத் தவிர்க்குமாறும் முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என். எம். அமீன் இவ்விடயமாக…
-
ஒலிம்பிக் வெற்றிப் பதக்கங்களின் தரவரிசை: கட்டாருக்கும் ஒரு பதக்கம்!
-MJ (படத்தில் கட்டார் வீரர் நாஸிர்) லண்டனில் தற்பொழுது இடம்பெற்றுவரும் உலகப் புகழ்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் நேற்று 31-07-2012 நிறைவடைந்த செவ்வாய்க்கிழமையின் படி, பின்வரும் நாடுகள் தாங்கள் பெற்ற வெற்றிப்பதக்கங்களின் அடிப்படையில் நிரற்படுத்தப்பட்டிருக்கின்றன. ஒலிம்பிக் போட்டிகளை நடாத்தும் பிரித்தாணியா 21வது இடத்துக்கு பின் தள்ளப்பட்டிருக்கின்றது. வழமை போல் சீனா முதலாவதாக தொடர்ந்தும் தனது இடத்தைத் தக்கவைத்துள்ளது.
-
50 சதவீத வீதி விளக்குகள் இன்று முதல் அணைக்கப்படும்!
இன்று முதலாம் திகதி முதல் நாட்டில் உள்ள வீதி விளக்குகளில் 50 சதவீதமானவற்றை அணைத்துவிட மின் சக்தி எரி சக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது. உள்ளுராட்சி மன்றங்களின் செயலாளர் மற்றும் பிரதிநிதிகளுடன் மின் சக்தி எரி சக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக நடத்திய விசேட கலந்துரையாடலில் இது பற்றித் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
-
நோன்பும் பெருநாளும்….
-மௌலவி KLM. இப்றாஹீம் மதனி ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பின் சிறப்புகள் ”யார் ரமளான் மாதத்தின் நோன்பை நோற்று பின்னும் அதைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பையும் நோற்கின்றாரோ (அவர்) வருடமெல்லாம் நோன்பு நோற்றதற்குச்சமம்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)
-
லண்டன் ஒலிம்பிக்: முன்னணியிலிருக்கும் நாடுகள்
-MJ நேற்று 30-07-2012 நிறைவடைந்த திங்கட்கிழமை இடம்பெற்ற போட்டிகளின்படி பின்வரும் நாடுகள் பதக்கங்களின் அடிப்படையில் நிரற்படுத்தப்பட்டிருக்கின்றன. ஒலிம்பிக் போட்டிகளை நடாத்தும் பெரிய பிரித்தாணியா இதுவரையில் தங்கம் பதக்கங்கள் எதனையும் பெறவில்லை. இருந்தும் ஒரு வெள்ளிப்பதக்கமும் 2 வெண்களப் பதக்கங்களையும் பெற்று நேற்றைய முடிவின்படி 20வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இலங்கைக்கு இதுவரையில் பதக்கம் கிடைக்கவில்லை. இந்தியா முதலாவது வெண்களப்பதக்கத்தை பெற்றிருந்தது.
-
க. பொ. த. (உ/த) பரீட்சை திட்டமிட்டபடி 6ம் திகதி
-தினகரன் * 2 இலட்சத்து 77,000 பேர் தோற்றுவர் * கடந்த வருடம் தோற்றிய 355 பேருக்கும் இவ்வருடம் மீண்டும் அனுமதி ஓகஸ்ட் ஆறாம் திகதி ஆரம்பமாகவுள்ள க. பொ. த. உயர்தரப் பரீட்சைக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜகத் புஸ்பகுமார தினகரனுக்குத் தெரிவித்தார்.
-
காணாமல்போன, களவாடப்பட்ட கடவுச்சீட்டுகள் பற்றி முறைப்பாடு தெரிவிக்க புதிய நடைமுறை
* நாளை முதல் அமுல் * மோசடிகளை தடுக்க இன்டர்போல் ஊடாக நடவடிக்கை * 26,485 காணாமல் போனதாக பதிவு காணாமற் போன அல்லது களவாடப்பட்ட கடவுச் சீட்டுகள் பற்றி முறைப்பாட்டை தெரிவிக்கும் புதிய நடைமுறையொன்றை குடிவரவு குடியகல்வு திணைக்களம் நாளை 01 ஆம் திகதி முதல் அமுல்படுத்துகிறது.