WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ஒலிம்பிக் 2012: இரசிகர்களை மகிழ்விக்கும் மெய்வல்லுநர் போட்டிகள்…

    -MJ வாரஇறுதிநாளை (Weekend) முன்னிட்டு லண்டன் ஒலிம்பிக் அரங்கு ‘ஹவுஸ் புல்’ ஐ எட்டி இருக்கின்றது. இதற்கு மற்றுமொரு காரணம் மெய்வல்லுநர் போட்டி இடம்பெறவதாகும்.

  • தமிழ், முஸ்லிம் தேசியங்கள் ஒரு போதும் ஒன்று சேராது- பஸீர் சேகுதாவூத்

    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தந்தை செல்வாவின் பக்குவத்தையும் முஸ்லிம் மக்கள் மறைந்த ஸ்ரீ.ல.மு.கா தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரபின் பக்குவத்தையும் பெறும் வரை தமிழ்த் தேசியமும் முஸ்லிம் தேசியமும் ஒரு போதுமே ஒன்று சேர மாட்டாது என கூட்டுறவுத்துறை பிரதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளருமான பஸீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

  • நேர்த்தியான கையெழுத்து வாய்ப்பதற்கு சிறுவயதிலேயே அடித்தளமிடப்பட வேண்டும்

    – செல்வநாயகம் (ஓய்வுபெற்ற அதிபர்)  ஒரு சில வளர்ந்தோராலும் பரீட்சை எழுதும் மாணவராலும் எழுதப்படும் எழுத்துக்கள் வெவ்வேறு வடிவங்களில் அமைந்து விடுவதால் வாசித்து விளங்க முடியாத நிலை காணப்படுகிறது. மாணவரின் விடைத்தாள் மதிப்பீட்டின் போது விடை தெரிந்தும் சரியான புள்ளியைப் பெறாது அவர்கள் பாதிப்படைவதையும் காணலாம். எழுத்தாற்றல் வேகம் தடைப்படும் போது குறிப்பிட்ட கால எல்லைக்குள் எழுத முடியாததால் நேரம் போதாது என மனதால் குமையும் மாணவரையும் காணலாம். எண்ணங்கள் கருத்தாகப் பேனை முனையில் வரிவடிவில் வெளிப்பட…

  • தேசத்திற்கு மகுடம் 2013: அபிவிருத்தி தீர்மானம்..

    மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசத்திற்கு மகுடம் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான இறுதித் தீர்மானம் எடுக்கும் கூட்டம் நேற்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

  • லண்டன் ஒலிம்பிக் 2012: திடீரென மாறிய வெற்றி வரிசை

    -MJ லண்டன் ஒலிம்பிக் போட்டிகள் வார இறுதி நாளை முன்னிட்டு களைகட்டியிருக்கின்றது. கடந்த மாதம் தொடர் மழையைச் சந்தித்து வந்த பிரித்தாணியா, தற்பொழுது இதமான காலநிலையால் பிரகாசிக்கின்றது. இதன் காரணமாக ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளும் வெளிநாட்டு வீரர்களுக்கும் இப்போட்டிகளைக் கண்டுகளிப்பதற்காக வந்த வெளிநாட்டவர்களுக்கும் பிரித்தாணியாவின்  தற்போதைய காலநிலை உகந்ததாகக் காணப்படுகின்றது.

  • மதவழிபாட்டுச் சுதந்திரம் கேள்விக்குள்ளாவதைச் சுட்டிக்காட்டினால் நையாண்டி செய்யப்படுகின்றோம்: ஹக்கீம்

    மதவழிபாட்டுச் சுதந்திரம் கேள்விக்குள்ளாவதைச் சுட்டிக்காட்டினால் நையாண்டி செய்யப்படுகின்றோம் என ஸ்ரீ லங்கா முஸ்லிம்காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான  ஹக்கீம் தெரிவித்தார். கல்குடாத் தொகுதி ஓட்டமாவடிப் பிரதேச மாவடிச்சேனையில் கட்சியின் கிளையொன்றை வியாழக்கிழமை திறந்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

  • மு. காங்கிரஸின் எழுச்சிப் பிரவாகத்தை அணைபோட்டுத் தடுக்க முடியாது: ஹக்கீம்

    கிழக்கு மண்ணிலும் முஸ்லிம்களின் அரசியல் பிரவாகம் ஆரம்பமாகப் போகின்றது. அத்தகைய சூழ்நிலையில்தான் இந்த தேர்தலை நாங்கள் சந்திக்கின்றோம். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற மாபெரும் இயக்கத்தின் எழுச்சிப் பிரவாகத்தை அணைபோட்டுத் தடுக்க முடியாது என்பதனால் தடுமாறிப்போயிருக்கின்ற சிலர் மொட்டைத்தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போட வெளிக்கிட்டு இருக்கின்றார்கள் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

  • கிழக்கு தேர்தல் களத்தில் இன,மத பிரசாரம் வேண்டாம்! வேட்பாளர்களுக்கு வேண்டுகோள்

    கிழக்கு மாகாண சபை தேர்தல் நடவடிக் கைகளில் இன, மத அடிப்படையில் பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டாமென தேசிய தேர்தல் கண்காணிப்பு நிலையம் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் சில அரசியல் கட்சிகள் தேசியத்துவத்துக்கு முக்கியத்துவமளித்து தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதைச் சுட்டிக்காட்டியுள்ள தேர்தல் கண்காணிப்பு நிலையம், சில கட்சிகள் இன, மத அடிப்படையில் பிரசாரங்களை முன்னெடுப்பதாகவும் தெரிவித்துள்ளது.

  • செவிடன் காதில் ஊதிய சங்கு!

    -MJ எவ்வளவுதான் தேர்தல் சம்பந்தமாக வேட்பாளர்களுக்கு கருத்தரங்குகளையும் அறிவுறுத்தல்களையும் அரசாங்கம் வழங்கினாலும் இவர்கள் கேட்கவே மாட்டார்களாம்!

  • ஓர் வெள்ளி இரவின் இரத்தக்கறை!

    -MJ இன்றைய நாள் 03-08-2012 ஓர் வெள்ளிக்கிழமை. இதே போன்றுதான் அன்றும் ஓர் வெள்ளிக்கிழமையின் மாலை நேரத்தில் படைத்தவனை வணங்குவதற்காக மாத்திரம் மக்கள் ஒன்று சேரும் இரு ஆயலங்களுக்குள் உதிரங்கள் வடிந்தோடின. அவை இரத்தக் கறைகளாய் முஸ்லிம்களின் உள்ளங்களில் உறைந்தன. ஆம். அதுதான் தன் உரிமைக்காகப் போராட வெளிக்கிட்டு பின்னர்  மனித மாமிசங்களைப் புசித்து, பாதாளத்துக்குள் விழுந்த தமிழீழ விடுதலைப் புலிகளால்  மிலேச்சத்தனமாக மேற்கொள்ளப்பட்ட மறக்க முடியாத 03-08-1990 காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலையாகும்.

  • வாக்காளர் அட்டைகள் 17-30 வரை விநியோகம்: கட்சித் தலைவர்களுடன் தேர்தல் ஆணையர் நாளை சந்திப்பு…

    கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் தொடர்பாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நாளை வெள்ளிக்கிழமை, தேர்தலில் போட்டியிடுகின்ற அரசியற் கட்சிகளின் தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் தலைவர்களை நேரில் சந்திக்கவுள்ளார்.

  • வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்களிப்பது பள்ளிவாயல்களை உடைப்பதற்கான அங்கீகாரம்: முபீன்

    வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்களிப்பது நமது பள்ளிவாயல்களை உடைப்பதற்கு வழங்கும் அங்கீகாரம் என கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிடும் வேட்பாளருமான யூ.எல்.எம்.என்.முபீன் தெரிவித்தார். ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பாலமுனை கிராமத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே முபீன் மேற்கண்டவாறு கூறினார்.

←Previous Page
1 … 1,229 1,230 1,231 1,232 1,233 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar