-
ஸஹ்ரானின் கொள்கைகளை பரப்பிய இருவர் உள்ளிட்ட நால்வர் TID கைது
கொழும்பு: சமூக வலைத்தளங்கள் ஊடாக கடும்போக்குவாத மற்றும் ஸஹ்ரான் ஹாஷிமின் கொள்கைகளை பரப்பியமை தொடர்பில் இருவர் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் (TID) கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
-
ரஞ்சன் மீது பாவப்பட்டு வழக்கை வாபஸ் பெற்றேன்
கொழும்பு: ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற ரஞ்சன் ராமநாயக்க மீது, நுகேகொடை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே வாபஸ் பெற்றுள்ளார்.
-
சூயஸ் கால்வாய் கப்பல்: முடிவுக்கு வந்தது நடுக்கடல் நெருக்கடி
கெய்ரோ: எகிப்தின் சூயஸ் கால்வாயில் தரை தட்டி நின்ற எவர் கிவன் என்ற மிகப்பெரிய சரக்கு கப்பலை, மிதக்கும் நிலைக்கு கொண்டு வருவதில் வெற்றி பெற்ற நிபுணர்கள், அதை கரை பகுதியில் இருந்து அப்புறப்படுத்திய மீட்புக் குழுவினர், அதை பாதுகாப்பான இடத்துக்கு இழுவை படகுகள் மூலம் கொண்டு சென்றனர்.
-
ஆதரவாளர்களின் செல்வாக்கு இருக்கும்வரை தலைமையில் இருப்பேன்: ரவூப் ஹக்கீம்
சம்மாந்துறை: கட்சியில் ஆதரவாளர்களுடைய செல்வாக்கும், நன்மதிப்பும் இருக்கும் வரைதான் கட்சித் தலைமையில் நான் இருப்பேன் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
-
சவூதி அரசினால் இலங்கைக்கு 75 மெ.தொன் பேரீச்சம் பழங்கள் அன்பளிப்பு
கொழும்பு: புனித ரமழானை முன்னிட்டு இம்முறை (2021) இலங்கை முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக 75மெற்றிக்தொன் பேரீத்தம் பழங்கள் சவூதி அரேபிய அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது.
-
சாரா உயிருடன் உள்ளாரா, தப்பிச் சென்றாரா? மீண்டும் மரபணு சோதனை
கொழும்பு: உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் காணாமல் போன சாரா ஹஸ்துன் என அழைக்கப்படும் புலஸ்தினி ராஜேந்திரன் இறந்து விட்டாரா? என்பதை உறுதிப்படுத்த புதிதாக மரபணு பரிசோதனை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
-
மாகாண சபைத் தேர்தல்; இறுதித் தீர்மானம் நாளை
கொழும்பு: மாகாண சபைத் தேர்தலை நடத்தும் முறைமை தொடர்பான இறுதி தீர்மானம் நாளை கூடவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கமைய, முன்னர் போன்று பழைய விருப்பு வாக்கு முறைமைக்கமைய தேர்தலை நடத்துவதா? அல்லது புதிய தொகுதி முறைமைக்கமைய தேர்தலை நடத்துவதா? என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளது.
-
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் காத்தான்குடி, மாத்தளையை சேர்ந்த இருவர் கைது
கொழும்பு: சமூக வலைத்தளங்கள் ஊடாக தீவிரவாத சித்தாந்தங்களை பரப்பியமை மற்றும் இந்நடவடிக்கைகளுக்காக நிதி திரட்டிய குற்றச்சாட்டுகள் தொடர்பில் இரு சந்தேகநபர்களை, பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் (TID) நேற்று (25) கைது செய்துள்ளனர்.
-
ஐ.நா தீர்மானம் நிறைவேற்றத்தால் இலங்கையில் நிலைமை மாறுமா?
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், உண்மையிலேயே அந்த நடவடிக்கை அந்நாட்டில் மனித உரிமைகள் பாதுகாப்புக்கு உதவுமா என பரவலாக பேசப்பட்டு வருகிறது.
-
இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பும், பிரித்தானியாவின் அரசியலும். தமிழர்களின் அடுத்தகட்ட நகர்வுகள் என்ன ?
இறுதி யுத்தத்தின்போது நடைபெற்ற யுத்தக் குற்றம், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமை பேரவையில் பிரித்தானியா தலைமையிலான மேற்கு நாடுகளினால் கொண்டுவரப்பட்ட இலங்கைக்கு எதிரான பிரேரனைக்காக இன்று (2021.03.23) நடைபெற்ற வாக்கெடுப்பில் எதிர்பார்த்தது போன்று இலங்கை தோல்வியடைந்துள்ளது.
-
இலங்கைக்கு எதிரான பிரேரணை 11 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்
ஜெனீவா: ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது அமர்வில் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை குறித்த பிரேரணை 11 மேலதி வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
தேய்வடைந்த டயர்களுடன் பயணித்தால் ரூ. 3,500 அபராதம்
கொழும்பு: தேய்வடைந்த டயர்களை பயன்படுத்தும் வாகனங்களை அடையாளம் காண்பதற்காக விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.