-
காவியுடை காடையர்களின் காட்டுமிராண்டித்தனத்தை தட்டிக்கேட்காத முஸ்லிம் தலைவர்கள் இருந்து என்ன பயன்.மட்டு மாநகர சபை உறுப்பினர் றம்ழான் கேள்வி.
– பழுளுல்லாஹ் பர்ஹான் காவியுடை காடையர்களின் காட்டுமிராண்டித்தனத்தை தட்டிக்கேட்காத முஸ்லிம் தலைவர்கள் இருந்து என்ன பயன் என மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் என்.கே.றம்ழான் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
-
மட்டு-கல்முனை பிரதான நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் 69வயது வயோதிபர் பலி-கா-குடி பொலிசார் தெரிவிப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு–கல்முனை பிரதான நெடுஞ்சாலையில் ஆரையம்பதி மகாவித்தியாலயத்திற்கு முன்பாக நேற்று சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற சைக்கிள் விபத்தில் 69 வயது வயோதிபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி ஜயவர்த்தன தெரிவித்தார்.
-
தெரிவுக்குழு: நோய்க்கு மருந்து தராமல் நோயை மேலும் அதிகரிக்கும் செயலாகவே தெரிகிறது-உலமா கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத்
– பழுலுல்லாஹ் பர்ஹான் மத அடிப்படைவாதங்கள் பற்றி ஆராய்வதற்கான ஜனாதிபதியின் பாராளுமன்ற சர்வ கட்சிக்குழு என்பது முஸ்லிம்கள் மத்தியிலுள்ள இயக்கங்களை தடைசெய்வதில்தான் கொண்டு போய் முடியுமே தவிர முஸ்லிம் மக்களுக்கெதிரான பேரினவாதத்தை அடக்கியதாக முடியாது என முஸ்லிம் உலமா கட்சி தெரிவித்துள்ளது.
-
விஸ்வரூபத்தை திரையிடக் கோரி கமல் ரசிகர்கள் ரத்ததானம்!
இந்தியா, டெல்லி மாணவி கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவத்தைப் பார்க்கிலும் விஸ்வரூபம் பெரும் சலசலப்பை இந்தியாவில் தந்பொழுது ஏற்படுத்தியிருக்கின்றது. பெங்களூரில் உள்ள ஊர்வசி தியேட்டரில் விஸ்வரூபத்தை திரையிடக் கோரி கமல் ரசிகர்கள் ரத்ததானம் செய்து வருகின்றனர்.
-
மட்டு, அம்பாறை மாவட்டங்களில் சுமார் 3 1/2 இலட்சம் பேர் பாதிப்பு
தராதரம் பாராது சகலருக்கும் உலருணவு; இரு வாரங்களுக்கு வழங்க பணிப்பு மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பெய்த கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக சுமார் 3 1/2 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையங்கள் தெரிவிக்கின்றன.
-
தேவையெனில் உச்சநீதிமன்றத்துக்கும் போவோம்: இஸ்லாமிய அமைப்புகள்
கேரளாவில் இந்தப் படம் வெளியான இரண்டு நாளில் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன கமல் ஹாஸனின் விஸ்வரூபம் படம் எக்காரணத்தைக் கொண்டும் வெளியாகக் கூடாது. தேவைப்பட்டால் இதற்காக உச்சநீதிமன்றத்துக்கும் செல்லத் தயாராக உள்ளதாக இஸ்லாமிய அமைப்புகள் கூட்டாக அறிவித்துள்ளன.
-
கடைசி நேரத்தில் பத்ம விருதுப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட கமல்ஹாஸன் பெயர்
திரையிடப்பட்ட விஸ்வரூபத்தை நிறுத்தியது மலேசிய அரசு கமல், விஸ்வரூபம்…முஸ்லிம்கள் என்றுதான் உலகம் முழுக்க இன்றைய பேச்சாக இருக்க, இந்திய மத்திய அரசின் உயரிய விருதான ‘பத்பூஷனு’க்கு பரிந்துரைக்கப்பட்ட கமல்ஹாஸனின் பெயர் கடைசி நேரத்தில் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாகவும், விஸ்வரூபம் சர்ச்சைதான் இதற்குக் காரணம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
-
கிழக்கு மாகாண பள்ளிக்கூடங்களில் பாலியல் புகார்கள்
கிழக்கு மாகாண பள்ளிக்கூடங்களில் மாணவிகள் மீதான பாலியல் சம்பவங்கள் தொடர்பாக கிடைத்துள்ள முறைப்பாடுகளின் பேரில் இதுவரை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசரா ஊழியர்கள் என 25 பேர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவிக்கின்றார்.
-
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அஸாத் ஸாலி பவுன்டேஸன் நிறுவனத்தால் 1500 கிலோ அரிசி சம்மேளனத்திடம் கையளிப்பு
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரனம் வழங்குவதற்கென 1500 கிலோ அரிசி அஸாத் ஸாலி பவுன்டேஸன்
-
அரசியல் கட்சிகளின் பெயர் பட்டியல் 31ஆம் திகதி வெளிவரும்
இலங்கையில் பதிவு செய்யப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பெயர் பட்டியல் 31ஆம் திகதி வெளியிடப் போவதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
-
பெரும் சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டுள்ள விஸ்வரூபம் நீதிபதிகளுக்கு திரையிடப்பட்டது
விஸ்வரூபம் படத்துக்கு இஸ்லாமிய சமூகத்தினர் பெரும் எதிர்ப்பு தெரிவித்து, படத்தை தடை செய்யக் கோரினர். அதை ஏற்று, இரண்டு வாரங்கள் படத்துக்கு தடை விதித்தது தமிழக அரசு. இதை எதிர்த்து நீதிமன்றம் போனார் கமல். தமிழக அரசின் தடைக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதி, நாளை மறுதினம் வரை தடை தொடரும் என அறிவித்துவிட்டார். மேலும் படத்தைப் பார்த்த பிறகுதான் தடையை விலக்குவதா இல்லையா என முடிவு செய்ய முடியும் என்று கூறிவிட்டார்.
-
அடைமழை; வெள்ளம் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்கள் மூழ்கின
அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் புதன் இரவு முதல் பெய்து வரும் அடைமழையினால் வெள்ளம் ஏற்பட்டுள்ளதோடு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேற்படி இரு மாவட்டங்களும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றது. போக்குவரத்துக்களும் பாதிக்கப் பட்டிருக்கின்றன. அதேநேரம் அறுவடைக்குத் தயாராகவிருந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் நெல் வயல்களும் நீரில் மூழ்கியுள்ளன.