-
பொது பல சேனாவின் பின்னணி அரசாங்கமே! ஹலால் அறிவிப்பு தொடர்பில் அஸாத் சாலி அவர்களின் செவ்வி
நேற்று இடம்பெற்ற ஹலால் தொடர்பிலான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தீர்மானத்தின் பின்னர் முன்னாள் கொழும்பு மேயர் அஸாத் சாலி அவர்கள் முஸ்லிம் குரலுக்கு வழங்கிய செவ்வியினை நன்றியோடு எமது வாசகர்களுக்காகப் பிரசுரிக்கின்றோம்.
-
பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு ரூ. 28 பில்லியன் கடன்: ஒன்பது மாத காலங்களுக்கு மாத்திரம் மின் கட்டணங்களில் தற்காலிக உயர்வு
எரிபொருள் விலை உயர்வினால் மின்சார சபை எதிர்கொண்டுள்ள பாரிய நிதி நெருக்கடிக்கு முகம் கொடுக்கும் வகையில் தற் காலிகமாக மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு மின்சக்தி, எரிசக்தி அமைச்சு உத்தேசித்துள்ளது. குறைந்தளவு மின்சாரத்தை பயன் படுத்தும் மக்களுக்கு அதிக சுமை ஏற்றாதவகையில் கட்டணத்தை உயர்த்துவதற்கு மின்சார சபை, பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு சிபார்சு செய்துள்ளது.
-
ஹலால் சான்றிதழ் தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் விஷேட ஊடக அறிக்கை
எமது தாய் நாடாகிய இலங்கை பல்லின மக்கள் வாழுகின்ற ஒரு நாடாகும். அவ்வாறே பல்வேறு சமயங்களும் பின்பற்றபடுகின்ற இந்நாட்டில் சகல இனத்தவரும் ஐக்கியமாகவும், சகவாழ்வுடனும் வாழவே விரும்புகின்றனர். இந்நிலையில் இன நல்லுறவைப் பாழ்படுத்தச் செய்கின்ற காரியங்கள் எதனையும் இந்நாட்டு மக்கள் எவரும் அனுமதிக்க மாட்டார்கள் என்பது எமது உறுதியான நம்பிக்கையாகும்.
-
வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றம், காணி விடங்கள் தொடர்பில் ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சர் ஆகியோருடன் பேச்சு
அமைச்சர் ஏ.எச்.எம். பெளசி – இர்ஷாத் றஹ்மத்துல்லா வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் மீள்குடியமர்ந்துள்ள முஸ்லிம் மக்களை சந்தித்து அவர்களது பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்தியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
-
தாருல் அதரின் மனித நேயம் பேணும் 9 ஆவது இரத்ததான நிகழ்வு!
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யா அமைப்பின் சமூக சேவைப்பிரிவினால் மனித நேயம் பேணும் 9 ஆவது மாபெரும் இரத்ததான முகாம் நேற்று ஞாயிறு காலை 9 மணியிலிருந்து, காத்தான்குடி-02, கப்பல் ஆலிம் வீதி, ஜாமிஉல் அதர் ஜும்ஆ பள்ளிவாயலில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
-
இன்றைய அ.இ.ஜ.உ. இன் பத்திரிகையாளர் மாநாடு: தீர்மானத்தின் காணொளி
AF-47 பல சர்ச்சைகளுக்கு மத்தியில் இலங்கையில் இடம்பெற்று வந்த ஹலால் எனும் முஸ்லிம்களின் உரிமைகளுக்கு எதிரான பொது பல சேனாவின் துவேசத்தனமான கருத்துக்களுக்கும் அவர்களது இலங்கையில் ஹலால் அகற்றல் நவடிக்கைகளுக்கும் எதிராக இலங்கை அரசியல்வாதிகள் வாய் மூடி மௌனம் காத்துவரும் இத்தருணத்தில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இன்றைய பத்திரிகையாளர் மாநாட்டில், இலங்கையில் தற்பொழுது ஏற்பட்டிருக்கும் ஹலால் விடய சர்ச்சைக்கு முடிவு வழங்கியது.
-
அபாயாவைக் களைந்தால் சல்வார் இருக்கு!
-MJ இலங்கை முஸ்லிம்கள் எதிர்பார்த்தபடியே சுமூகமான ஓர் முடிவை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஹலால் விடயத்தில் இன்று பகிரங்கமாக தனது முடிவை அறிவித்திருக்கின்றது.
-
காத்தான்குடி கதீப்மார், இமாம்கள் சம்மேளனத்தின் 2013 ஆண்டுக்காண 15வது வருடாந்த மாநாடும் சமூக மேம்பாட்டுக்கான உலமாக்களின் பங்களிப்பு எனும் தொனிப்பொருளிலான விஸேட கருத்தரங்கும்
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டு-காத்தான்குடி கதீப்மார், இமாம்கள் சம்மேளனத்தின் 2013 ஆண்டுக்காண 15வது வருடாந்த மாநாடும் சமூக மேம்பாட்டுக்கான உலமாக்களின் பங்களிப்பு எனும் தொனிப்பொருளிலான விஸேட கருத்தரங்கும் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை காத்தான்குடி அன்வர் வித்தியாலய கேட்போர் கூடத்தில் காத்தான்குடி கதீப்மார், இமாம்கள் சம்மேளனத்தின் தலைவர் மௌலவி ஏ.எல். ஆதம்லெவ்வை பலாஹி தலைமையில் இடம்பெற்றது.
-
நாளை சர்வதேச குளுக்கோமா தினம்
பழுளுல்லாஹ் பர்ஹான் சர்வதேச குளுக்கோமா தினம் நாளை 12ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு இன்று 11ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரையான காலப்பகுதியை தேசிய குளுக்கோமா வாரமாக சுகாதார அமைச்சு பிரகடனம் செய்துள்ளது.
-
மட்டு கல்லடி புதிய பாலம் எதிர்வரும் 22ம் திகதி மக்கள் பாவனைக்காக
பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு கல்முனை பிரதான நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கல்லடி புதிய பால நிர்மாண வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகின்ற அதேவேளை குறித்த புதிய பாலம் இலங்கை நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இம்மாதம் 22ம் திகதி உத்தியோகபூர்வமாக மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது.
-
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும் “காண கண் கோடி வேண்டும் கஃபாவை…!” புனித உம்ரா சிறப்புப் பயிலரங்கம்!
பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம.. குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம், ஏற்பாடு செய்யும் புனித உம்ரா 1434 / 2013 பயணத்தை முன்னிட்டு உம்ரா யாத்ரீகர்களுக்கு “காண கண் கோடி வேண்டும் கஃபாவை…!” என்ற தலைப்பில் இன்ஷா அல்லாஹ் வருகின்ற 15.03.2013 வெள்ளிக்கிழமை அன்று அந்திமாலை 6:00 மணி முதல் மக்ரிப் தொழுகையைத் தொடர்ந்து இரவு 9:30 மணி வரை குவைத், ஃகைத்தான், K-Tic தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசலான “அல் மிக்தாத் பின் அம்ரூ (ரழி)…
-
‘ஹலால்’ விசேட இறுதி அறிவிப்பை உலமா சபை இன்று வெளியிடும்
ஹலால் தொடர்பான விசேட அறிவிப்பினை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இன்று உத்தியோகபூர்வமாக விடுக்கவுள்ளது.