WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • கே.ஈ.ஏ. சர்வதேச பாடசாலையின் அறிமுகம் தொடர்பாக முன்னாள் அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதியும் கே.ஈ.ஏ. சர்வதேச பாடசாலையின் இயக்குனர் சபை பணிப்பாளர்களில் ஒருவருமான ஏ.எல்.எம். றஸூல் தெரிவித்த கருத்துக்களின் ஒலிப்பதிவு

    மட்டக்களப்பு: கே.ஈ.ஏ. சர்வதேச பாடசாலையின் அறிமுகம், வளர்ச்சி, தூர நோக்கு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதியும் கே.ஈ.ஏ. சர்வதேச பாடசாலையின் இயக்குனர் சபை பணிப்பாளர்களில் ஒருவருமான ஏ.எல்.எம்.றஸூல் தெரிவித்த  கருத்துக்களின் ஒலிப்பதிவு இங்கு பிரசுரிக்கப்படுகிறது.

  • மட்டு கல்லடி பழைய பாலத்திற்கு தற்காலிக பூட்டு

    – பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு கல்லடி பழைய பாலம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மட்டு கல்லடி பழைய பாலம் புனரமைப்புச் செய்யப்படுவதாலும் அதன் வீதிகள் புனரமைப்புச் செய்யப்படுவதாலுமே இப்பழைய பாலம் மூடப்பட்டுள்ளது.

  • இலங்கையில் ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ் பெற்ற ஒரே ஒரு சர்வதேச பாடசாலையான (K.E.A.) சர்வதேச பாடசாலையின் 6வது கிளை இன்று மட்டக்களப்பில் உதயம்

    -பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: இலங்கையில் ஐ.எஸ்.ஓ. (I.S.O.) தரச் சான்றிதழ் பெற்ற ஒரே  ஒரு சர்வதேச பாடசாலையான  கே.ஈ.ஏ. (K.E.A.) சர்வதேச பாடசாலையின்  ஆறாவது கிளை இன்று புதன்கிழமை காலை மன்முணை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்னாலுள்ள இலக்கம் 6, வைத்தியசாலை வீதி, மட்டக்களப்பு என்ற முகவரியில் நிகழ்வின் பிரதம அதிதி மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி எஸ். பாக்கியராசாவினால் வைபவரீதியாக திறந்துவைக்கப்பட்டுள்ளது.

  • ஹெல்பொட தொழிற்பயிற்சி 63 மில்லியன் ரூபா இந்திய நிதியுதவியுடன் பயிற்சி உபகரணங்களை வழங்கும் நிகழ்ச்சி

    – பழுளுல்லாஹ் பர்ஹான் நுவரெலியா: நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள ஹெல்பொட பிரதேசத்திலுள்ள இலங்கை தொழில் பயிற்சி அதிகாரசபையின் கீழ் இயங்கும் தொழில் பயிற்சி நிலையத்திற்கு 63 மில்லியன் ரூபா இந்திய நிதியுதவியுடன் பயிற்சி உபகரணங்களை வழங்கும் நிகழ்ச்சி மற்றும் புதிதாக அமைக்கப்பட்ட கட்டிடத்தொகுதியை திறந்து வைக்கும் நிகழ்ச்சி இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும மற்றும் இந்திய உயாஸ்தானிகர் அசோக் கே. காந்தா அவர்களின் தலைமையில் ஹெல்பொட தொழிற்பயிற்சி நிலையத்தில் நேற்று நடைபெற்றது.

  • இஸ்லாத்திற்கு எதிராக இனவாதிகளுக்கு பதில் கொடுக்கும் பொதுக்கூட்டம்-ஸ்ரீ.ல.தௌஹீத் ஜமாஅத்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: அண்மைக்காலமாக இஸ்லாத்திற்கு எதிராக இனவாதிகள் வைக்கும் குற்றச் சாட்டுக்களுக்கு பதில் கொடுக்கும் வகையில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்  எதிர்வரும் 06ம் திகதி கொழும்பு கொம்பணி வீதியில் ஒரு மாபெரும் பொதுக் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.

  • 17 சந்தேக நபர்களும் எச்சரிக்கப்பட்டு நேற்று விடுதலை பெபிலாயான தாக்குதல் சம்பவம்:

    பெபிலியான ‘பெஷன் பக்’ களஞ்சியசாலை மீதான தாக்குதல் தொடர்பில் கைதான 17 சந்தேக நபர்களையும் கடுமையாக எச்சரித்த நீதவான், பின்னர் அவர்களை விடுதலை செய்தார்.

  • மாகாண அரச சேவைக்கான விதிக் கோவை வழங்கும் நிகழ்வு

    – பஹ்மியூஸூப் திருகோணமலை: கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் மாகாண அரச சேவைக்கான விதிக் கோவை வழங்கும் நிகழ்வு 02.04.2013 ஆம் திகதி செவ்வாய்கிழமை ஆளுநர் ரியல் அட்மிரால் மொஹான் விஜயவிக்கிரம தலைமையில் நடைபெற்றது.

  • யப்பானிய பிரதித்தூதுவர் – கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திப்பு

    – பஹ்மியூஸூப் திருகோணமலை: கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பெண்கள் நிதியம் அமைத்து வாழ்வாதாரத்தை மேம்படுத்த யப்பான் உதவவுள்ளது.

  • ‘றிஸானா நபீக் தேசத்தின் புதல்வி’ நூல் மற்றும் இறுவெட்டு வெளியீடு தொடர்பான கணக்கறிக்கை

    – காத்தான்குடி மீடியா போரம் காத்தான்குடி: ‘றிஸானா நபீக் தேசத்தின் புதல்வி’ நூல் மற்றும் இறுவெட்டு வெளியீடு தொடர்பான கணக்கறிக்கையை காத்தான்குடி மீடியா போரம் பொதுமக்களின் பார்வைக்காக இத்துடன் சமர்ப்பித்திருக்கின்றது.

  • காத்தான்குடி மத்திய கல்லூரியின் “Sports Academy”

    – KCC media Unit காத்தான்குடி: எமது காத்தான்குடி மத்திய கல்லூரியானது அண்மைக் காலமாக சமூகத்தின் ஒத்துழைபபுடன் பல முன்னேற்றங்களைக் கண்டு வருகிறது. கல்லூரியின் விளையாட்டுத்துறையில் முன்னேற்றத்தைக் கொண்டு வரும் நோக்கில் கல்லூரி மைதானததில் விளையாட்டுப பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்ற காத்தான்குடியின் பிரபல்யம்பெற்ற விளையாட்டு கழகங்களான சன்றைஸ், அல் ஹிக்மா, இலாஹிஸ், காத்தான்குடி விளையாட்டுக கழகம் என்பவற்றுடன் ஒன்றினைந்து “KCC Sports Academy” எனும் அமைப்பை ஆரம்பித்துள்ளது.

  • குறுகிய காலத்தில் மட்டு காத்தான்குடியில் 70க்கும் மேற்பட்ட கால்நடைகள் இறந்துள்ளன

    பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு காத்தான்குடிப் பிரதேசத்தில் ஆடு மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் அண்மைக்காலமாக இறந்து வருவதனால் அது தொடர்பாக பண்ணையாளர்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் விப்புணர்வூட்டும்

  • பாராளுமன்றத்தில் தூக்க மாத்திரை சாப்பிட்டவர்கள் போன்று இருந்து விட்டு பாராளுமன்றத்துக்கு வெளியே பயில்வான் லேகியம் சாப்பிட்டவர்கள் போன்று நமது உறுப்பினர்கள் வீரம் பேசுகிறார்கள் – முபாறக் அப்துல் மஜீத்

    பழுலுல்லாஹ் பர்ஹான் கல்முனை: கல்முனையில் நடைபெற்ற உலமாக்களுடனான கருத்தரங்கில் பேசுகையிலேயே இவ்வாறு முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து குறிப்பிட்டதாவது,

←Previous Page
1 … 1,104 1,105 1,106 1,107 1,108 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar