சர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைகழகத்திற்கான நிதி பரிமாற்றம் தொடர்பான முழுமையான அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்கும்படி , நிதிக் குற்ற புலனாய்வு பிரிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த உத்தரவை கொழும்பு தலைமை நீதவான் லங்கா ஜெயரத்ன பணித்துள்ளார்.
அந்தவகையில் 4.4 பில்லியன் வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்டு, இலங்கை வங்கியின் ஒரு கணக்கில் வரவு வைக்கப்பட்ட நிலையில், புனாணையில் கட்டப்படும் மட்டக்களப்பு பல்கலைகழகத்திற்கு சொந்தமான குறித்த வங்கிக்கணக்கில் தற்போது வெறும் 36,000 ரூபா மட்டுமே உள்ளதாகவும் நிதிக்குற்றப்புலனாய்வு பிரிவு குறிப்பிட்டது.
ஜனவரி 14, 2016 முதல் மே 31, 2019 வரை 206 சந்தர்ப்பங்களில் 4.44 பில்லியன் ரூபா வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
825 சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட கணக்கிலிருந்து பணம் திரும்பப் பெறப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது மீதமுள்ள தொகை 36,298.47 ரூபா என நிதிக்குற்றப்புலனாய்வு பிரிவு கூறியுள்ளது.வரவு வைக்கப்பட்டுள்ள 3.64 பில்லியன் ரூபா, நான்கு சந்தர்ப்பங்களில் சவுதி அரேபியாவில் உள்ள இன்ஹெரிடென்ஸ் அலி அப்துல்லா அல்ஜுபல்லி ஜெட்டா என்ற நிறுவனத்தால் கொள்ளுப்பிட்டியில் உள்ள இலங்கை வங்கியின் கணக்கு எண் 78445137க்கு அனுப்பப்பட்டதாகவும், குறித்த பணம் எவ்வாறு பெறப்பட்டது மற்றும் பணம் எவ்வாறு செலவிடப்பட்டது என்பதைக் கண்டறிய மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் எஃப்.சி.ஐ.டி அவர்களின் ‘பி’ அறிக்கை மூலம் நீதிமன்றத்தில் வரவு வைக்கப்பட்டுள்ள 3.64 பில்லியன் ரூபா, நான்கு சந்தர்ப்பங்களில் சவுதி அரேபியாவில் உள்ள இன்ஹெரிடென்ஸ் அலி அப்துல்லா அல்ஜுபல்லி ஜெட்டா என்ற நிறுவனத்தால் கொள்ளுப்பிட்டியில் உள்ள இலங்கை வங்கியின் கணக்கு எண் 78445137க்கு அனுப்பப்பட்டதாகவும், குறித்த பணம் எவ்வாறு பெறப்பட்டது மற்றும் பணம் எவ்வாறு செலவிடப்பட்டது என்பதைக் கண்டறிய மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் எஃப்.சி.ஐ.டி அவர்களின் ‘பி’ அறிக்கை மூலம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இந்த நிலையில் நிறுவனத்தின் தற்போதைய இயக்குநர்களான மொஹமட் ஹிஸ்புல்லா அகமது ஹிராத் ஹிஸ்புல்லா, முகமது சஹாப்தீன் முகமது அக்ரம் மற்றும் அகமது முஃப்ரி ஆகியோர் மட்டுமே கொழும்பு பங்குச் சந்தையின் தலைமையக கணக்குகளை நடத்தி வருகின்றனர் என்பதும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
10/18, லேக் டிரைவ், கொழும்பு 08 இல் அமைந்துள்ள ‘இலங்கை ஹீரா அறக்கட்டளை’க்கு மட்டக்களப்பு புணாணை ஜெயந்தியா கிராமத்தில் 35 ஏக்கர் நிலத்தை மகாவலி ஆணையம் ஒப்படைத்துள்ள நிலையில், அதன்பிறகு குறித்த நிலத்தை மட்டக்களப்பு வளாகத்திற்கு மாற்றுவதற்கான நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் வளாகம் நிறுவப்பட்ட நிலம் தொடர்பான குத்தகை ஒப்பந்தம் 2013 முதல் அமல்படுத்தப்பட்டதாக குற்றவியல் புலனாய்வுத் துறை (சிஐடி) நீதிமன்றத்திற்கு தெரிவித்ததாக குற்றவியல் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.இலங்கை ஹிர்ஜா அறக்கட்டளை குறித்து சமூக சேவைகள் திணைக்களம் விசாரணை நடத்தியுள்ளதாகவும், அறக்கட்டளையின் பதிவை உறுதிப்படுத்த விண்ணப்ப படிவத்துடன் கோப்பை சமர்ப்பிக்க சமூக சேவைகள் திணைக்களம் இதுவரை தவறிவிட்டதாகவும் நிதி சேவைகள் பிரிவு நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.
கொழும்பு எண் 10/18 லேக் டிரைவில் அமைந்துள்ள இந்த நிறுவனம் தொடர்பான தகவல்களை நிறுவன பதிவாளர் துறை சரிபார்த்தபோது குறித்த நிறுவனம் 10.12.2014 அன்று TA 2991 இன் கீழ் பதிவு செய்யப்பட்டதோடு, இது ஒரு வரையறுக்கப்பட்ட நிறுவனம் என்றும் ஏழை மற்றும் குறைந்த வருமானம் உடையவர்களுக்கு தொழிற்பயிற்சியை ஊக்குவிக்க உதவுகிறதாகவும் அதில் குறிப்பிடப்பட்டது.
விசாரணைகள் குறித்த விரிவான அறிக்கையை வழங்கிய பின்னர், வழக்கு தொடர்பான பதின்மூன்று வங்கிக் கணக்குகள் குறித்த கூடுதல் தகவல்களைப் பெற அனுமதி வழங்குமாறு எஃப்.சி.ஐ.டி நீதிமன்றத்தை கோரியுள்ளது.
இந்த நிலையில் எஃப்.சி.ஐ.டி சமர்ப்பித்த தகவல்களை பரிசீலித்த பின்னர், இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு விரைவில் நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்குமாறு மாஜிஸ்திரேட் எஃப்.சி.ஐ.டிக்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.– Abdulla Mohamed