கிளிநொச்சி: நீண்ட நாள் அதி முக்கிய தேவையாக இருந்துவந்த யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கான பள்ளிவாயல் 27-03-2019ல் கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டது. இப்பள்ளிவாயல் அமைக்கப்பட்டதானது அளப்பெரிய மகிழ்ச்சியைத் தருவதாக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவிப்பதுடன், இப்பள்ளிவாயல் அமைப்பதற்கு நிதியுதவிகளை வழங்கிய சகோதரர்களுக்கும் தாங்கள் பிரார்த்திப்பதாகத் தெரிவிக்கின்றனர்.