வோஷிங்டன்: பல ஆண்டுகளாக வட கொரியா மீது தொடர்ந்து வரும் ”யுக்திபூர்வமான பொறுமையுடன் கூடிய அணுகுமுறை“ தோல்வியடைந்துவிட்டதாகவும், தீர்க்கமான பதிலடியை கொடுப்பதற்கான நேரம் வந்துவிட்டதாகவும் அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். டிரம்ப் மற்றும் மூன் ஜியே-இன் `பொறுப்பற்ற மற்றும் கொடூரமான ஆட்சியினால் இரு நாடுகளும் இணைந்தே அச்சுறுத்தலை சந்தித்து வருகிறோம்` என தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன்னுடன் கலந்து கொண்ட பத்திரிகையாளர் சந்திப்பில் டிரம்ப் தெரிவித்தார்.
வேறு ஒரு சிறந்த பாதையை விரைவாக தேர்ந்தெடுக்கும் படி வட கொரியாவை ட்ரம்ப் கேட்டுக்கொண்டுள்ளார். வட கொரிய தலைவர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டிய அவசியம் இருப்பதாக தென் கொரிய அதிபர் மூன் தெரிவித்தார்.
மேலும், தனது நாடு பாதுகாப்பு சீர்திருத்தங்களைத் தொடரும் என்றும், தன்னை பாதுகாத்துக் கொள்ளும் திறனை வளர்த்துக் கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுமட்டுமல்லாமல், வட கொரியா தொடர்பான விவாதங்களே பேச்சு வார்த்தையில் முக்கியமாக இடம் பெற்றது என்று கூறிய மூன், வலிமையான பாதுகாப்பே உண்மையான அமைதியை ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் கொண்டுவரும் என்பதையும் மூன் வலியுறுத்தியுனார்.
வெள்ளை மாளிகையில் பேசிய ட்ரம்ப், `வட கொரியாவுடன் கடைபிடித்து வந்த யுக்தி பூர்வமான பொறுமையுடன் கூடிய அணுகுமுறை சகாப்தம் தோல்வியடைந்து விட்டது என்றும், இதற்கு முன்னர் பலமுறை தோல்வியடைந்துள்ளதாகவும் தெரிவித்த அவர், ` வெளிப்படையாகச் சொன்னால், பொறுமை முடிவுக்கு வந்துவிட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார். ராஜீய உறவுகள், பாதுகாப்பு மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் குறித்தும், நம்முடைய கூட்டாளிகளையும், நம் சொந்த நாட்டு மக்களையும் வட கொரியா போன்ற அச்சுறுத்தல்களில் இருந்து மீட்டெடுக்கவும் அமெரிக்கா, வட கொரியா, ஜப்பான் மற்றும் உலகம் முழுவதும் உள்ள தங்கள் கூட்டணி நாடுகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக டிரம்ப் தெரிவித்தார்.
வட கொரியப் பணத்தை சர்வதேசப் பரிவர்த்தனைகளில் பயன்படுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்ட சீன வங்கியின் மீது தடைகளை விதிக்கும் அமெரிக்கா மீது சீனா கோபமாக பதிலளித்ததையடுத்து டிரம்பின் இந்த அறிப்பு வெளியாகியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பிற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் எடுக்கப்படும் தவறான நடவடிக்கைகளை அமெரிக்கா நிறுத்திக் கொள்ள வேண்டும் என சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர் வலியுறுத்திருக்கிறார்.