பிரிஸ்பன்: பாகிஸ்தான் அணி வீரர் அசாத் ஷபிக் அவுஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்டில் சதம் அடித்ததன் மூலம் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளர். இவர் 6-வது நபராக களம் இறங்கி 9 சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். பாகிஸ்தான் அணியின் 6-வது வீரராக களம் இறங்கிய அசாத் ஷபிக் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். இதற்கு முன் கேரி சோபர்ஸ் 8 சதங்கள் அடித்ததே அதிகபட்ச சதமாக இருந்தது.
அத்தோடு வெஸ்ட் இண்டீஸ் அணியின் சந்தர்பால், டோனி கிரேக், ரிக்கி பாண்டிங், திலகரத்னே ஆகியோர் தலா 7 சதங்கள் அடித்துள்ளனர்.அசாத் ஷபிக் 137 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஸ்டார்கின் பந்துவீச்சில் வார்னரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தமை குறிப்பித்தக்கது.