-
பா.திருஞானம்
கொழும்பு: ஐக்கிய தேசிய கட்சியின், இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தலைவராக அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ இன்று (07) பதவியேற்றார். இந்த பதவியேற்க்கும் நிகழ்வு இராஜகிரியவில் அமைந்துள்ள இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் காரியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன் போது மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், தேசிய கலந்துரையாடல் மற்றும் அரச மொழி அமைச்சரான மனோ கணேசன், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன், பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.அரவிந்தகுமார், வடிவேல் சுரேஸ் உட்பட மாகாண சபை உறுப்பினர்கள், பெருந்தோட்ட கம்பனிகளின் அதிகாரிகள் ஆதரவாளர்கள், தொழிலாளர்கள் கலந்துக் கொண்டார்கள்.


Leave a comment