-
சப்னி
அட்டாளைச்சேனை: அட்டாளைச்சேனை பிரதான வீதியில் அட்டாளைச்சேனை லக்கி ஸ்டோருக்கு முன்னால் இன்று (01) மாலை இடம்பெற்ற விபத்தில், அட்டாளைச்சேனை கோணாவத்தையைச் சேர்ந்த ஜப்பார் ஜெம்ஸத் 12 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். இந்த சிறுவன் வீதியை கடக்க முற்பட்ட போது, கல்முனையிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிச் சென்ற காரொன்று மோதியே இவ்விபத்து சம்பவித்துள்ளதென பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்துடன் தொடர்புடைய காரின் சாரதியை கைது செய்யப்பட்டுள்ளதாகவும், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


Leave a comment