கொழும்பு: நாட்டின் பல பாகங்களிலும் இன்று சனிக்கிழமை மீண்டும் அடை மழை பெய்து வருவதையடுத்து நீர் நிலைகளில் நீர் மட்டம் உயர்ந்து வருகின்றது.தலைநகர் கொழும்பு உட்பட நாட்டின் சில பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
களனி ஆறு உட்பட சில நீர் நிலைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் அதிகரித்துள்ளன. அண்மித்த பகுதிகளிலுள்ள குடியிருப்பாளர்களை அவதானமாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ மையத்தினால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளன.
Leave a comment