பயணிகளின் உயிருடன் விளையாடிய விமான ஓட்டிகளின் உரிமம் ரத்து!

flight runwayஜெய்ப்பூர்: கடந்த பெப்ரவரி 27, 2016 அன்று ஜெய்ப்பூரில் தரை இறங்க வேண்டிய இண்டிகோ 6E – 237 என்கிற விமானத்தின் விமான ஓட்டிகள், தாங்கள் தரை இறங்க வேண்டிய ரன் வே என்று நினைத்து ஜெய்ப்பூரின் ஒரு முக்கிய சாலையில் தரை இறங்க முயற்சித்திருக்கிறார்கள். விமானத்தில் பொருத்தப்பட்டிருந்த க்ரவுண்ட் ப்ரோக்சிமிட்டி சென்சார் (Ground Proximity Censor) ஆபத்தான உயரத்தில் (போதுமான உயரத்தில் பறக்காதது) பறக்காததற்கு எச்சரிக்கை கொடுத்த பிறகு தான் விமானிகள் தங்கள் தவறை உணர்ந்து சரியான பாதையில் சென்றிருக்கிறார்களாம்.

இப்படி கவனக்குறைவாக செயல்பட்டு, விமான பயணிகளின் உயிரை ஆபத்திற்குள்ளாக்கிய காரணத்திற்காக, அந்த விமானிகள் இருவருக்கும் பறப்பதற்கான உரிமத்தை டிஜிசிஏ (Directorate General of Civil Aviation) ரத்து செய்திருக்கிறது.

flight runway

Published by

Leave a comment