காத்தான்குடி: காத்தான்குடியிலுள்ள உணவகம் ஒன்றில் வாடிக்கையாளர் ஒருவர் இறைச்சி ரொட்டி வாங்கி சாப்பிட்ட போது அதனுள் ஆணி ஒன்று இருந்துள்ளது. இதனை அவர் பொதுச்சுகாதார பரிசோதகரிடம் சென்று முறையிட்டுள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்டவரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது தாங்கள் இதனை பொதுச்சுகாதார பரிசோதகரிடம் தகுந்த ஆதாரங்களுடன் முறையிட்டுள்ளதாகவும், இது போன்ற செயற்பாடு இனி நடைபெறாமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் கூறியுள்ளதாக தெரியவருகிறது.
Published by



Leave a comment