வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சகோதரர்களுக்கு காத்தான்குடி சம்மேளனத்தினரால் பாரிய நிதிசேகரிப்பு!

  • S. சஜீத்

federationகாத்தான்குடி: எமது நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல இடங்களில் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டு தற்போது முகாம்களில் இடம்பெயர்ந்து இருக்கும் சகோதரர்களுக்கு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில், (20.05.2016) இன்று வெள்ளிக்கிழமை காத்தான்குடியில் காணப்படும் ஜும்ஆ பள்ளிவாயல்களில் ஏற்கனவே பொதுமக்களுக்கு விடுத்திருந்த அறிவித்தலின் படி ஜும்ஆ தொழுகையினை தொடர்ந்து “வெள்ள அனத்தத்தினால் பாதிக்கப்ட்ட நம் உறவுகளுக்கு உதவிக்கரம் நீட்டுவோம்” எனும் தோணிப் பொருளை முன்வைத்து சம்மேளன உறுப்பினர்கள் மற்றும் ஜும்ஆ பள்ளிவாயல் நிர்வாகிகள் ஆகியோரின் பங்களிப்புடன் பாரியதொரு தொகை வசூலிக்கப்பட்டன.

இம் மகத்தான மனிதநேயம் பேணும் பணிக்கு காத்தான்குடி சகோதரர்கள் பாதிக்கபட்ட உறவுகளுக்கு நிதி உதவிகளை ஆர்வத்துடன் வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

federation

Published by

Leave a comment