லண்டன்: சிறிய ஆப்ரிக்க நாடான ருவாண்டாவின் கிரிக்கெட் அணியின் தலைவர் புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார்.வலைப்பயிற்சியில் இதுவரை சாதனையாக இருந்த 51 மணி நேரத்தை எரிக் துசீங்கிஸிமானா முறியடித்துள்ளார். ருவாண்டாவில் முதலாவது சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஒன்றை கட்டுவதற்கு நிதி திரட்டும் நோக்கிலேயே தொடர்ச்சியாக அவர் வலைப்பயிற்சியில் ஈடுபட்டார்.
அந்த நாட்டில் கிரிக்கெட் விளையாட்டு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் மேலும் ஒரு நடவடிக்கையாக இது பார்க்கப்படுகின்றது. இப்படியான நடவடிக்கைகள் மூலமாக ருவாண்டாவில் மேலும் பலர் கிரிக்கெட் விளையாட்டை முன்னெடுக்க ஊக்குவிக்கப்படுவார்கள் என நம்பப்படுகிறது.
அவரது சாதனையை பன்னாட்டு ஆப்ரிகத் தலைவர்கள் பாராட்டியுள்ளனர். உள்நாட்டு போரினால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்ட ருவாண்டாவில் கிரிக்கெட் விளையாட்டுக்கான ஆதரவு சிறிது சிறிதாக அதிகரித்து வருகிறது.