காத்தான்குடி: காத்தான்குடியில் பல்வேறு வகையான சமூகப் பணிகளை மேற்கொண்டு வருகின்ற சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சமூகப்பணிகளை மேற்கொண்ட அமைப்பின் அங்கத்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 08.05.2016 ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி அந்நாஸர் வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.
சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் தலைவர் எம்.ஐ.எம்.ஹாரிஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுக்கு அமைப்பின் அங்கத்தவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
நகர சபை பொலிஸ் நிலையம் ஜம்மியதுஸ் ஸபாப் மற்றும் ஏனைய நிறுவனங்களால் வழங்கப்பட்ட சான்றிதழ்கள் சமூகப் பணியில் ஈடுபட்ட அங்கத்தவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Published by



Leave a comment