டோஹா: கத்தார் நாட்டின் வரலாற்றில் முதன் முறையாக ECM (pvt) Ltd ஏற்பாட்டில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அறிவிப்பாளரும் கவிஞருமான எஸ் . ஜனூஸ் எழுதிய மூசாப்பும் ஒரு முழ வெயிலும் கவிதை நூல் அறிமுக விழாவும் நண்பர்கள் ஒன்று கூடலும் 05.05.2016 வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு கத்தார் சல்வா ரோட் Mid Mag ரவுண்டபோட் அருகில் அமைந்திருக்கும் STTAFFORD SRILANKAN பாடசாலையில் வெகு விமர்சையாக இடம்பெறவுள்ளது.
பொருளியலாளர் அபூதாலிப் எம். ரிஸாட் தலைமையில் இடம்பெறவுள்ள இன் நிகழ்வில், பிரதம அதிதியாக நிர்மாண முகாமைத்துவ முதுமாணி அல்ஹாஜ் நாபீர் உதுமான்கண்டு (ஸ்தாபகர் நாபீர் பௌண்டேசன், முகாமைத்துவ பணிப்பாளர் – ECM (pvt) Ltd ) அவர்களும் சிறப்பதிதியாக எம்.எஸ்.எம் முனாஸ் ( senior mep quantity surveyor ) அவர்களும் மற்றும் இலங்கையின் புகழ்பூத்த கவிஞர்கள் எழுத்தாளர்கள் மற்றும் கலை இலக்கிய ஆர்வலர்கள் என பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளார்கள்
நிகழ்வை மேலும் சிறப்பிக்கவும் உற்சாகமளிக்கவும் கத்தார் வாழ் தமிழ் பேசும் உறவுகள் அனைவரையும் இன் நிகழ்வில் கலந்து சிறப்பிகுமாறு அன்புடன் அழைக்கின்றார்கள் ஏற்பாட்டுக் குழுவினர்.
இடம் – STTAFFORD SRILANKAN SCHOOL
SALWA ROD DOHA QATARகாலம் – 05.05.2016
நேரம் – பி.ப 6 மணி(தகவல்: அன்வர் புகாரி)
Published by


Leave a comment