காத்தான்குடி: சுகாதாரத்திற்கு தீங்குவிளைவிக்கும் வகையில் பூஞ்சனம் பிடித்த வட்டிலப்பத்தை விற்பனை செய்த வெதுப்பக வர்த்தகர் ஒருவருக்கெதிராக நாளை மட்டக்களப்பு நீதிமன்றத்தில் இரு வழக்குகள் தாக்கல் செய்யப்படவுள்ளதாக காத்தான்குடி பிரதேச பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள பிரபல வெதுப்பகமொன்றில் நேற்று கொள்வனவு செய்யப்பட்ட வட்டிலப்பத்திலேயே இவ்வாறு பூஞ்சனம் காணப்பட்டுள்ளது. குறித்த நபர் சுகாதார அதிகாரிகளிடம் முறையிட்டதையடுத்து, வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை சுகாதார அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
Leave a comment