“லெப்டினன்ட் யோஷித ராஜபக்சவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வந்த அனைத்து விசாரணைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன”- கடற்படை!

yosithaகொழும்பு:  கடற்படை லெப்டினன்ட் யோஷித ராஜபக்சவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வந்த அனைத்து விசாரணைகளையும் இடைநிறுத்தியுள்ளதாகக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர். யோஷித தற்போது பணமோசடி சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளமையை அடுத்தே தமது விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார்.

யோஷிதவின் கல்வித்தரம் மற்றும் கடற்படைக்கு அறிவிக்காமல் அவர் 70 தடவைகள் வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டமை தொடர்பில் கடற்படையினர் ஏற்கனவே விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்தக் குற்றச்சாட்டுக்களில் பெரும்பாலும் யோசிதவின் குற்றங்கள் நிரூபிக்கக்கூடிய வகையில் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

yositha

Published by

Leave a comment