அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹூ
காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவினால் ‘தஃவாக்களத்தில் ஆலிமாக்களது பங்களிப்பு’ என்ற தொனிப்பொருளில் நமது பிரதேச ஆலிமாக்களுக்காக ஏற்பாடு செய்துள்ள கருத்தரங்கு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 30.01.2016 சனிக்கிழமை காலை 08.30 மணி தொடக்கம் பகல் 12.30 மணி வரை காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இக்;கருத்தரங்கில் பங்குபற்றுவதற்காக விண்ணப்பித்த மௌலவியாக்களும் இதுவரை விண்ணப்பிக்காத மௌலவியாக்களும் பங்குபற்றி பயன்பெறுமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கின்றோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் எம் அனைவரது தூய செயற்பாடுகளையும் அங்கீகரிப்பானாக.
جزاكم اللـــــه خــــــــــــــيرا
மௌலவி AM. அப்துல் காதர் (பலாஹி)JP அஷ்ஷெய்க் AGM. ஜெலீல் (மதனி)BA
தலைவர். செயலாளர்.
——————————————————————————————————
தலைவர், செயலாளர்,
சகல ஜூம்ஆப்பள்ளிவாயல்களுக்கும்,
காத்தான்குடிப் பிரதேசம்.
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹூ
மேற்படி அறிவித்தலை இன்ஷா அல்லாஹ் 29.01.2016ம் திகதி ஜூம்ஆத் தொழுகையின் ஃ இஷாத் தொழுகையின் பின்னர் தங்களது பள்ளிவாயலில் அறிவிப்பதுடன், விளம்பரப்பலகையில் காட்சிப்படுத்த ஆவன செய்யுமாறும் அன்பாய்க் கேட்டுக் கொள்கின்றேன்.
அஷ்ஷெய்க் AGM. ஜெலீல் (மதனி)BA
செயலாளர்.
Leave a comment