இஸ்தான்புல்லில் குண்டுத் தாக்குதல்; பத்து பேர் பலி

turkeyஇஸ்தான்புல்: துருக்கியின் இஸ்தான்புல் நகரில் பெரும் குண்டொன்று வெடித்துள்ளது.நகருடைய பழைய பகுதியின் மையத்தில் அமைந்துள்ள சுல்தானஹ்மட் சதுக்கத்தை இந்த குண்டுவெடிப்பு அதிரவைத்துள்ளது.சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகின்ற ஒரு இடம் இது.குண்டுவெடிப்பை அடுத்து தற்போது அப்பகுதியை பொலிசார் அடைத்துள்ளனர்.

குண்டுவெடிப்பில் பத்து பேர் உயிரிழந்துள்ளதாகவும், பதினைந்து பேர் காயமடைந்துள்ளதாகவும் இஸ்தான்புல் ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.இது தற்கொலை குண்டுத் தாக்குதல் என்று சில செய்திகள் கூறினாலும் அதனை இன்னும் உறுதிசெய்ய முடியவில்லை.

turkey

Published by

Leave a comment