இன்றைய நாள் (ஜன.08)

mahinda familyஉடும்பாக இருந்த
குடும்பாட்சி ஒன்று
தடம் புரண்ட நிகழ்வு
இடம் பெற்ற நாள் இது.

சாதி வெறி பேசி
ஆதரவு தேடியோர்
நாதியின்றிப் போக
பேதி மருந்து கொடுத்த நாள்

வெள்ளை வேன் கடத்தல்
பள்ளி வாயல் தாக்கல்
தொல்லைகள் பலவும்
இல்லாமல் போன நாள்

குடு கொண்டு வருதல்
நடு ரோட்டில் சுடுதல்
கொடுமைகள் பலவும்
விடைபெற்று சென்ற நாள்

mahinda family

பொல்லாத விலைகளால்
பிள்ளையை ஆற்றிலே
தள்ளிக் கொன்ற நிலை
இல்லாமல் போன நாள்

மீடியா சொல்வதை
காடையர் சேர்ந்து
மூடி மறைப்பது
ஓடி ஒழிந்த நாள்

பொது பல என்னும்
புது பலாய் கிளப்பி
சதி செய்த கோட்டா
கதி கலங்கிப் போன நாள்.

புலிகளை ஒழித்ததால்
அழியாதப் புகழ் கொண்டும்
இழிவான செயல்களால்
மலிவாகத் தோற்ற நாள்.

சிறுபான்மை இணைந்து
ஒரு நாட்டின் விதியை
சரியாக மாற்றிய
அரிய நாள் இது.

புதிய ஆட்சியிலும்
சதிகாரர் இருந்தாலும்
பழைய ஆட்சிபோல்
பயங்கள் பெரிதாய் இல்லை.

  • Mohamed Nizous

Published by

Leave a comment