துப்பாக்கி ஏந்திய கிரிக்கெட் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஒருவர் பலி!

afghan_cricketகாபூல்: ஆப்கானிஸ்தான் தேசியக் கிரிக்கெட் அணி சிம்பாப்வேக்கு எதிராக பெற்ற ஒரு நாள் போட்டித் தொடர் வெற்றியைக் கொண்டாடிய சிலர் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு பதின்பருவ இளைஞர் கொல்லப்பட்டார்.ஆப்கானிஸ்தானின் தெற்கே நடந்த இந்த சம்பவத்தைத் தவிர, தலைநகர் காபூலில் நடந்த வேறொரு சம்பவத்தில் வேறு பலர் காயமடைந்தனர்.

ஷார்ஜாவில் நடந்த சிம்பாப்வே-ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கிடையேயான ஐந்து ஒரு நாள் போட்டித் தொடரை ஆப்கானிஸ்தான் வென்றதை அடுத்து, ஆப்கான் ரசிகர்கள் பல இடங்களில் வீதிகளில் ஆடியும், வானில் துப்பாக்கியால் சுட்டும் கொண்டாடினர்.இந்த சம்பவங்கள் தொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

afghan_cricket

மகிழ்ச்சியை வெளிப்படுத்த இது ஒரு மோசமான வழி என்று ஆப்கானிஸ்தானின் முன்னாள் வெளியுறவு துணை அமைச்சர் ஒருவர் கூறியிருக்கிறார்.

Published by

Leave a comment