- ஜுனைட். எம்.பஹ்த்
காத்தான்குடி: காத்தான்குடியில் இயங்கிவரும் YESDO அமைப்பினால் இன்று 20.12.2015 காத்தான்குடி கர்பலா பிரதேசத்தில் உள்ள வறிய மாணவர்களுக்கான புத்தகப்பைகள் அல்மனார் கர்பலா பாடசாலையில் வைத்து மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இந் நிகழ்வின் போது உரையாற்றிய YESDO அமைப்பின் செயளார் முகமட் அஸாஹிம் ஆசிரியர்,
இதற்காக உதவிய சகோதர்களுக்கு YESDO நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. இத்திட்டத்தின் முதல் கட்டமாக இப்பாடசாலை மாணவர்களின் திருப்தியினைப் பெற்றுக்கொண்டும், இது போல் மாணவர்களாகிய நீங்களும் உங்களுக்கு பின்வரும் மாணவர்களின் திருப்தியினைப் பெற முயற்சிக்க வேண்டும், அதே போல்
இவ்வாரத்தின் இறுதி நாளில் இன்னுமொரு பாடசாலை யினது மாணவர்களின் தேவையை பூர்திசெய்ய YESDO தீர்மானித்து உள்ளோம் என குறிப்பிட்டார்.
Leave a comment