- ஜுனைட் எம். பஹ்த்
காத்தான்குடி: தற்காலத்தில் நமது முஸ்லிம் சமூகத்தில் ஏற்பட்டுள்ள சமூக,கலாச்சார ,சமய சீர்கேடுகள், போதை பொருள் பாவனை போன்றவை தொடர்பாக சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் செயற்திட்டங்களை ” தூய தேசத்தை நோக்கிய பயணம் ” என்ற சீர்திருத்த பயணத்தை முஹாசபா மீடியா நெட்வொர்க் முன்னெடுத்து வருகின்றது.
இதனது ஒரு கட்டமான “சுய விசாரணை”,” சிகரட் வாழ்வா? சாவா?” என்ற பிரசுரங்களை காத்தான்குடி பிரதேச செயலாளர், காத்தான்குடி நகர சபை அதிகாரிகள், ஊழியர்களுக்கும்,பொதுமக்களுக்கும் வழங்கபட்டது.
இது தொடர்பாக பல விடயங்களை கருத்திற்கொண்டு இன்னும் பல நடவடிக்கைகள் முன்னெடுப்பது குறிப்பிடத்தக்கது.


Leave a comment