நாங்கள் குண்டு வைக்கும் குண்டரல்ல தொண்டு செய்யும் தொண்டர்

Chennai flood foodநாங்கள்

குண்டு வைக்கும்

குண்டரல்ல

தொண்டு செய்யும்

தொண்டர்.

உண்டு வாழ

உணவில்லா

அண்டை நாட்டின் சென்னையில்

கண்டு கேட்டு

காலடிக்குச் சென்று

தொண்டு செய்கிறார்

தூர நோக்கு முஸ்லிம்கள்.

பெண் சாதிக்கு ஏசுதல்

பெருமானார் வழியென்று

கண்மூடிப் பேசும்

கன்றாவிக்கு மத்தியில்

என் சாதி உன் சாதி

எதுவும் பாராது

வெள்ளத்தில் இறங்கி

அல்லாடும் மக்களுக்கு

அல்லாஹ்வுக்காய் உதவும்

எல்லா முஸ்லிம்களுக்கும்

வல்லான் இறைவன்

வளமளிப்பானாக.

Chennai flood food

பள்ளிகள் எதற்கென்று

பார்த்துக் கேட்டோர்க்கு

நல்ல பதிலொன்றை

சொல்லி இருக்கிறார்கள்.

எல்லோரும் வாருங்கள்

இறையில்லம் இருக்கிறது.

வெள்ளத்தால் வீடிழந்தோர்

உள்ளத்தில் உருகுகின்றார்.

விமர்சித்து விமர்சித்தே

வீராப்பு சிலர் பேச

அமர்க்களம் ஏதுமின்றி

அல்லாஹ்வுக்காய் இரங்கி

ஆறுதலும் கொடுக்கின்றார்

சோறு கறியும் கொடுக்கின்றார்

யார் எதை சொன்னாலும்

இஸ்லாம் இனியதென்று

ஊர் உலகம் கண்டறிய

உதவும் இச்செயல்கள்

  • காத்தான்குடி நிஷவ்ஸ்

Published by

Leave a comment