சம்மேளனம், ஜம்மிய்யா: ஏன் இந்த மௌனம்….???

federation zakathஅண்மை காலமாக எமது காத்தான்குடியில் இடம் பெற்றுவரும் கலாச்சார சீர்கேடுகள் மற்றும் மார்க்க விழுமியங்கள் மீரப்படுவது தொடர்பிலும் எமது சகோதரிகளின் பாதுகாப்பு தொடர்பிலான கடிதமொன்று 19/11/2015 ம் திகதி வியாழக்கிழமை காத்தான்குடி பள்ளிவயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மற்றும் காத்தான்குடி ஜம் இய்யதுல் உலமா சபை ஆகிய நிறுவனங்களுக்கு என்னால் அனுப்பி வைக்கப்பட்டது.

எனது இக் கடிதத்தை 22/11/2015 ஞாயிற்றுக்கிழமை காலை சம்மேளனத்தின் பொதுக்கூட்டத்திலும், அதே தினம் இரவு ஜம் இய்யதுல் உலமா சபை கூட்டத்திலும் வாசிக்கப்பட்டதாக அறியக்கூடியதாக இருந்தது.

இருந்தும் கடிதம் அனுப்பப்பட்டு இன்றுடன் 11நாட்கள்ஆகியும் இதுவரை எனது கடிதத்திற்கான பதில் அனுப்பப்படவில்லை. அத்தோடு இது விடயமாக எடுக்கப்பட்ட தீர்மானத்தை அல்லது நடவடிக்கைகள் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படவுமில்லை..

federation zakath
சம்மேளனம்

# இவ் விடயங்களை சுட்டிக்காட்டியும் இதுவரை நடவடிக்கை எடுக்காதுக்கான காரணம் என்ன?

# இது விடயத்தில் தீர்மானம் எடுப்பதற்கு இன்னும் எத்தனை பொதுக்கூட்டம் கூடவேண்டும் அல்லது நடவடிக்கை எடுக்க எத்தனை வாரங்கள் தேவைப்படும்?

# கடிதம் அனுப்பியவர் சாதாரண ஒரு பொதுமகன் என்பதால் இக் கடிதத்தில் கவனம் செலுத்தவோ நடவடிக்கை எடுக்கவோ பதில் அனுப்பவோ தேவை இல்லை என்ற நிலைப்பாடா?

# இப்பிரச்சினை காதோடு காதாக பேசி விட்டால் சரி விசாரணை என்ற பெயரில் ஒரு கூட்டம் கூடி முடிந்தால் சரி காலப்போக்கில் எல்லாம் மனறந்திடும் என்ற என்னமா?

# அல்லது வழமையான உறக்கமா?

  • ஜுனைட். எம்.பஹ்த்
    சரீப்புரக்டர் லேன்..
    காத்தான்குடி-2.

Published by

Leave a comment