கொழும்பில் பலஸ்தீன் ஒருமைப்பாட்டு தின நிகழ்வு

palestineகொழும்பு: சர்வதேச பலஸ்தீன் ஒருமைப்பாட்டு தினம் வருடாந்தம் நவம்பர் மாதம் 29 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு கொழும்பில் சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரி­யவின் தலைமையில் இடம்­பெ­ற­வுள்ள நிகழ்­வில் இஸ்­ரே­லிய முன்னாள் ஜெனரல் ஒருவரின் மக­னான பிர­பல பேச்­சாளர் மிகோ பெலட் சிறப்பு பேச்­சா­ள­ராக பங்­கேற்­க­வுள்ளார்.

இலங்கை பலஸ்தீன் ஒரு­மைப்­பாட்டு இயக்கம் ஏற்­பாடு செய்­துள்ள இந்த நிகழ்வு எதிர்­வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை பிற்­பகல் 3.45 மணிக்கு விளை­யாட்டு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்­பெ­ற­வுள்­ளது.

இந்த நிகழ்வில் விஷேட உரை­யாற்­ற­வுள்ள மிகோ பெலட்டின் பாட்­டனார் இஸ்­ரே­லிய சுதந்­திர பிர­கடனத்தில் கையொப்­ப­மிட்ட பிர­பல யூத தலை­வ­ரான எவர்ஹாம் கட்­னெல்சன் என்­பவர் என்­பதும் இவ­ரது தந்தை, 1967 ஆம் ஆண்டு இடம்­பெற்ற ஆறு நாள் யுத்­தத்தின் போது களத்தில் இருந்து போரிட்ட பிர­பல இஸ்­ரே­லிய இரா­ணுவ ஜென­ர­லான ‘ மெட்டி’ என அறி­யப்­படும் ஜெனரல் மட்­டி­யாஹூ பெலெட் என்­பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

palestine

மிகோ பெலட், இந்த ஒரு­மைப்­பாட்டு நிகழ்வில் தனது தனிப்­பட்ட வாழ்க்கைப் பய­ணத்தை மையப்­ப­டுத்தி உரை­யாற்­ற­வுள்ளார். அதில் 1947 முதல் பலஸ்தீன் இஸ்ரேல் பிரச்­சி­னையில், தன்னால் கண்­ட­றி­யப்­பட்ட பல உண்­மை­க­ளையும் அவர் வெளிப்­ப­டுத்­த­வுள்ளார்.

மிகோ பெலட் தற்­போது இஸ்­ரே­லுக்கு எதி­ரா­கவும் பலஸ்­தீ­னுக்கு ஆத­ர­வா­கவும் உலகின் பல பாகங்­க­ளுக்கும் சென்று குரல் கொடுத்து வரு­வ­துடன் இவ்­வி­காரம் தொடர்பில் பிர­ப­ல­மான புத்­த­கங்­க­ளையும் எழு­தி­யுள்ளார்.

பொது மக்­களும் கலந்­து­கொள்ள முடி­யு­மான திறந்த நிகழ்­வாக ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்ள இந் நிகழ்வில் மறைந்த எழுத்­தாளர் ஹமீட் அப்துல் கரீம் எழு­திய கட்­டு­ரை­களின் தொகுப்­புக்கள் அடங்­கிய புத்­தகம் ஒன்றும் வெளி­யி­டப்­ப­ட­வுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

  • ஆர். ரஸ்மின்

Published by

Leave a comment