உளவளத்துணை தொடர்பான செயலமர்வு

  • எம்.எச்.எம். அன்வர்

kadampanathanமட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்ட வெளிக்கள அரச உத்தியோகத்தர்களுக்கான ‘உன்னதமான உளநலத்தை நோக்கிய உளவளத்துணை’ எனும் தலைப்பில் செயலமர்வு இன்று (09.11.2015) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. சமூக சேவை அமைச்சின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இச்செயலமர்வில் உளவளத்துணை வைத்தியர் திரு கடம்பநாதன் அவர்களால் விரிவுரை இடம்பெற்றதுடன் அரச உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மக்களோடு தொடர்பு கொள்ளும்போது ஏற்படும் உளவளம் தொடர்பான அனுகுமுறைகள் அதற்கான தீர்வுகள் தொடர்பாக விளக்கமளித்தார்.

அத்துடன் இது தொடர்பான சிக்கல்கள் மனஅழுத்தங்கள் ஏற்படும்போது தன்னை சந்தித்து ஆலோசனைகளையும் மேலதிக விளக்கங்களையும் பெற்றுக்கொள்ளமுடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

kadampanathan

மேற்படி நிகழ்வுக்கு மன்முனை வடக்கு, ஆரையம்பதி,களுவாஞ்சிக்குடி, காத்தான்குடி, வவுனதீவு மற்றும் மாவட்ட செயலகத்தில் கடமைபுரியும் சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் திவிநெகும உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

meeting

Published by

Leave a comment