காணவில்லை

  • MJ

flood 2014மழை வந்தால்
வெள்ளம் வரும்
தவளை கத்தும்
புற்புதர்களுக்குள்ளும்
வடிகாண்களுக்குள்ளும்
பாம்புகள் ஒழிந்துகொள்ளும்

அடுத்தவன்
வெற்றுக்காணியிலும்,
வீட்டுவாசல் முன்னாலும்
வீசிய குப்பைகள்
அழுகி நாற்றமெடுக்கும்

நோய் தொற்று ஈக்களும்
டெங்கு நுளம்புகளும்
மஞ்சல் காய்ச்சலும்
ஊரை ஆக்கிரமிக்கும்

ட்ரெய்ணேஜ் நிறைந்து
குந்தவும் முடியாமல்
குடியிருக்கவும் முடியாமல்
மேட்டுநில வீடுகளுக்குள்
தஞ்சமடைதல்

flood 2014

மழையைத் திட்டுது
ஒரு கூட்டம்
அரசியல்வாதிகளைச் சபிக்குது
மற்றொரு கூட்டம்

மழைக்கால பஞ்சம்
பட்டிணி, வறுமை
வழமைபோல்
வாட்டுகிறது
காத்தான்குடியில்

தேர்தலென்றால்
சோற்றுப்பார்சல்களுடன்
ஊடகவியலாளர்களுடன்
படையெடுக்கும் அரசியல்வாதிகளை
இன்றைய மழைக்கு காணவில்லை!

Published by

2 responses to “காணவில்லை”

  1. இதுக்கு முதல் வந்தவனை தோக்கடித்துவிட்டீங்க இப்ப சோத்துப்பார்சலோட வரெனுமென்டு எதிர்பாக்கிறது எந்ந ஊரு நியாயம் காக்கா?இனி அரிசோட தவுடோட வருவாரு மில்லுக்க இருந்து காத்திக்கிட்டிரிங்க.

  2. NM. Abdul Careem Avatar
    NM. Abdul Careem

    அப்போ புனர்வாழ்வு அமைச்சராயிருந்து கொண்டு தேங்காயா திருவுரயாம்?

Leave a reply to NM. Abdul Careem Cancel reply