காத்தான்குடி: மௌலவி அப்துர் றஊபிடம் ஏழு வருடங்கள் கல்வி பயின்ற AJ நுஃமான் என்பவர் (கறுப்பு ஷேர்ட் அணிந்தவர்) மௌலவி அப்துர் றஊபிற்கெதிராக நாம் வெளியிட்ட DVD களால் கவரப்பட்டு தூய தௌஹீதை ஏற்றார். அல்ஹம்துலில்லாஹ்!
நேற்று நடைபெற்ற எமது மாநாட்டில் எமது மேடையிலேயே அவர் ஏறினார். இவ்வாறு ஏறியதன் மூலம் மௌலவி அப்துர் றஊபின் கொள்கை தவறானது என்பதையும் தான் அதற்கு எந்த வகையிலும் உடன்பாடில்லை என்பதையும் கலந்து கொண்ட மக்களுக்கு வெளிப்படுத்துவதே அவரது நோக்கமாக இருந்தது.
இவ்வாறு முன்வந்த இவரை நாம் பாராட்டுகிறோம். இப்படி இவர் மட்டுமல்ல எத்தனையோ றப்பானிகள் இந்தக் கொள்கை பிழையானது என்பதை உணர்ந்திருக்கிறார்கள். அவர்களால் இதை விட்டும் வெளியே வர முடியாத நிலையில் உள்ளார்கள். இதை தனிப்பட்ட வகையில் தன்னிடம் தெரிவித்ததாக மௌலவி M.C.M ஸஹ்றான் (மஸ்ஊதி) நேற்றைய மாநாட்டு உரையில் தெரிவித்தார்.
தகவல்: மௌலவி M.C.M ஸைனி (உமரீ)

Leave a comment