புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கடவுச்சீட்டுக்கான அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட நிறுவனமாக காத்தான்குடி அல்-இனாறா மெனேஜ்மன்ட் நிறுவனம் தெரிவு

al inaraகாத்தான்குடி: இலங்கை குடி வரவு,குடியகல்வு திணைக்களத்தினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கடவுச்சீட்டுக்கான அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட நிறுவனமாக காத்தான்குடி பிரதான வீதி இலக்கம் 357லுள்ள அல்-இனாறா மெனேஜ்மன்ட் நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அல்-இனாறா மெனேஜ்மன்ட் நிறுவன முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.ஏ.கே.பலீலுர் ரஹ்மான்(JP) தெரிவித்தார்.

இலங்கை குடி வரவு,குடியகல்வு திணைக்களத்தினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கடவுச்சீட்டுக்கான புகைப்படங்களை இலங்கை குடி வரவு,குடியகல்வு திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட நிறுவனமொன்றின் மூலமே வழங்கமுடியும்.

al inara

அதற்கான அங்கீகாரத்தை காத்தான்குடியிலுள்ள மேற்படி அல்-இனாறா மெனேஜ்மன்ட் நிறுவனத்திற்கு குடிவரவு குடியகல்வு திணைக்களம் வழங்கியுள்ளதாக எஸ்.ஏ.கே.பலீலுர் ரஹ்மான் மேலும் தெரிவித்தார்.

மேலதிக தொடர்புகளுக்கு:

TP 0652246110, 065 2247898

(நமது நிருபர்)

Published by

Leave a comment