- நமது நிருபர்
காத்தான்குடி: வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையில் ‘முத்தான வியர்வை 2015’ எனும் தொனிப்பொருளில் கண்காட்சியும் விற்பனையும் நேற்று (29) காத்தான்குடி அட்வகேட் அப்துல் காதர் வீதியிலுள்ள திவினெகும வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கிச்சங்கத்தில் இடம்பெற்றது.
காத்தான்குடி பிரதேச செயலாளர் ஏ சி அப்கர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட வாழ்வின் எழுச்சி பணிப்பாளர் திரு குணரெட்ணம் ,விஷேட அதிதிகளாக காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி யு எல் நஸீர்தீன், கால்நடை வைத்திய அதிகாரி டாக்டர் டுஜித்ரா, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் திவினெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.
மேற்படி கண்காட்சியில் திவிநெகும பயனாளிகளால் உற்பத்தி செய்யப்பட்ட உற்பத்திப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டதுடன், விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




Leave a comment