காத்தான்குடி புனித ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு காத்தான்குடி மீடியாபோரத்தின் ஏற்பாட்டில் ஊடக உறவுகளின் ஒன்று கூடல் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 26.09.2015 அன்று சனிக்கிழமை முழு நிலவில் காத்தான்குடியில் இடம் பெறவுள்ளதாக அதன் தலைவர் ஏ எல் டீன் பைறூஸ் தெரிவித்தார்.
ஊடகவியலாளர்களின் திறமைகளை வெளிக் கொணரும் நோக்கில் கலை கலாசார நிகழ்வுகளும் நடைபெறவுள்ளது.
இதில் காத்தான்குடி மீடியா போரத்தினை சேர்ந்த பொதுச்சபை அங்கத்தவர்கள் மற்றும் நிருவாக உறுப்பினர்கள் ஊடகவியலாளர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இவ்வொன்று கூடலுக்கு வருகைதரும் போரத்தின் அங்கத்தவர்கள் அனைவருக்கும் நினைவுச்சின்னங்கள் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்
பிரச்சினைகளையும் தேவைகளையும் முன்கொண்டு செல்லும் ஊடக உறவுகளை புரிந்துணர்வுடன் கட்டியெழுப்பி சிறந்ததொரு ஆளுமையுள்ள ஊடகவியலாளராக மாற்றுவதே எமது நோக்கமாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a comment