-
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி
காத்தான்குடி: நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் விஷேட மக்கள் சந்திப்பு ஒன்று நேற்று (25.08.2015) கடற்கரை வீதியில் அமைந்துள்ள அதன் மக்கள் அரங்கில் இடம்பெற்றது.
நல்லாட்சிக்கான தேசிய முன்னநியின்பிராந்திய தலைமைத்துவ சபை உறுப்பினர் SMM.பஸீர் ஆசிரியர் தலைமையில் இடம்பெற்ற இம்மக்கள் சந்திப்பில் தலைமைத்துவசபை உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், அங்கத்தவர்கள் ஆதரவாளர்கள் என பெருந்தொகையான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான், அதன் தேசிய அமைப்பாளர் MBMபிர்தௌஸ் நளீமி ஆகியோர் உரையாற்றினார்கள்.




Leave a comment