-
பழுலுல்லாஹ் பர்ஹான்
மட்டக்களப்பு: எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டதாக செய்தி வெளியானதையடுத்து கடந்த 21 வெள்ளிக்கிழமை காத்தான்குடியின் பல பாகங்களிலும் பட்டாசுகள் வெடித்து ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி ஆரவாரத்தில் ஈடுபட்டனர்.
அதன்போது ஏற்பப்பட்ட வன்முறைச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆதரவாளர்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் நேற்று 22 சனிக்கிழமை இரவு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூரினார்.
அதனை தொடர்ந்து காத்தான்குடிக்கு விஜயம் செய்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் காத்தான்குடியில் வன்முறைச் சம்பவம் இடம்பெற்ற காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள தேநீர் சாலைக்கும் ,தேசிய தெவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாயலுக்கும் நேரில் சென்று பார்வையிட்டதோடு இவ்வன்முறை சம்பவம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் யூ.பீ.திசாநாயக்க உள்ளிட்ட பொலிஸ் உயரதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அத்தோடு கிழக்கு மாகாண சபை உறுப்பினரும்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற வேட்பாளருமான சிப்லி பாரூக்கின் இல்லத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலும் பங்கேற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.




Leave a comment