ஜனாதிபதித் தேர்தலுக்கு பஸ் பெற்றுக்கொண்டமை தொடர்பில் மஹிந்தவுக்கு எதிராக வழக்கு

  • எம்.ஐ.அப்துல் நஸார்

mahindaகொழும்பு: ஜனாதிபதித் தேர்தலின்போது அரசியல் வேலைகளுக்காக இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் வண்டிகைளைப் பெற்றுக்கொண்டமைக்காக செலுத்தப்பட வேண்டிய 14 கோடி ரூபாய்களைக் கோரி இலங்கை போக்குவரத்து சபை ஐக்கிய மக்கள் சுததந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் நடவடிக்கைக் குழுவைச் சேர்ந்த ஏழு பேருக்கு எதிராக கொழும்பு வணிக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஐக்கிய மக்கள் சுததந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் செயலாளர் சுசில் பிரேமஜயந்த, ஸ்ரீலங்கா சுததந்திரக் கட்சியின் முன்னாள் செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா, காமினி செனரத், அமல் சேனாதிலங்கார உள்ளிட்ட ஏழு பேர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

Published by

Leave a comment