- AF-90
சம்மாந்துறை: திகாமடுள்ள மாவட்டம் சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் பொதுஜன பெரமுன எனும் நாகப்பாம்பு சின்னத்தில் போட்டியிடும் பேரினவாத இயக்கமான பொதுபலசேனாவுக்கு 8 வாக்குகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. இந்த எட்டு வாக்குகளும் வேண்டுமென்றே அளிக்கப்பட்டதா என்பது தற்பொழுது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பாம்பு சின்னம் தெட்டத் தெளிவாக ஏனைய அனைத்து சின்னங்களில் இருந்தும் தெளிவாக வேறுபடுமிடத்து, இந்த நாகப்பாம்பு சின்னத்துக்கு ஓர் பிரமாண்டமான முஸ்லிம் தொகுதியில் இருந்து எவ்வாறு இந்த 8 வாக்குகளும் அளிக்கப்பட்டன என்பது கேள்விக்குரியாக இருக்கின்றது.
தவறுதலாகப் போடுவதற்கு வாய்ப்பே இல்லாத நிலையில், குறித்த தேர்தலை எதிர்ப்பவர்கள் இந்த வாக்குகளை பொது ஜன பெரமுனவிற்கு அளித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Leave a comment