காத்தான்குடி: பாராளுமன்றத் தேர்தல் 2015இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஒழுங்கு விதிகள் மற்றும் இஸ்லாமிய விதிமுறைகளுக்குள் நின்று இத்தேர்தலை முன்னனெடுத்து வன்முறைகள் மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாத வண்ணம் நடந்து கொள்ளுமாறு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தால் ஜூம்ஆ பள்ளிவாயல்கள் மற்றும் ஊடகங்கள் மூலமாக பொது மக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளன.
தேர்தல் முடிவின் பிற்பாடு வெற்றி தோல்வியினை இறைவனின் பெயரால் பொருந்திக்கொள்ளுமாறும் மார்க்கத்திற்கு முரணான வகையில் நடந்தகொள்ளவேண்டாம் எனவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a comment