நாமல் ராஜபக்சவை நிதி மோசடி விசாரணை பொலிஸ் பிரிவில் ஆஜராகும்படி அறிவிப்பு

namalஹம்பாந்தோட்டை: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஹம்பாந்தோட்டை மாவட்ட வேட்பாளருமான நாமல் ராஜபக்சவை நிதி மோசடி விசாரணை பொலிஸ் பிரிவில் ஆஜராகும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 12ஆம் தேதி தன்னை நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு சமூகமளிக்கும்டி அறிவிக்கப்பட்டுள்ளதாக நாமல் ராஜபக்ச தனது டிவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

தனது தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாகவும் நாமல் ராஜபக்ச தனது டிவிட்டர் பதிவேற்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

namal

Published by

Leave a comment