– NFGG
காத்தான்குடி: சின்னப்பள்ளி சதுக்கத்தில் நேற்று நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஏற்பாடு செய்திருந்த எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.NFGGயின் பிராந்திய செயற்குழு உறுப்பினர் அல்ஹாஜ் MSM.இப்ராஹீம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இப்பிரச்சாரக் கூட்டத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளரும் மட்டகக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 2ம் இலக்க வேட்பாளருமான பொறியியலாளர் அப்துர் ரஹ்மான், NFGGயின் தலைமைத்துவசபை உறுப்பினர் பழுலுல் ஹக், சட்ட முதுமாணி அஸ்ஹர், அதன் தேசிய அமைப்பாளர் அஷ்ஷெய்க் MBM.பிர்தௌஸ் (நளீமி), ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 5ம் இலக்க வேட்பாளர் பொறியியலாளர் சிப்லி பாறூக் உள்ளிட்ட பலர் உரையாற்றினார்கள்.
NFGGயின் பொதுச்செயலாளர் MR.நஜா முஹம்மத், பிராந்திய செயற்குழு உறுப்பினகளான முன்னாள் காத்தான்குடி நகரசபை உறுப்பினருமான AGM.ஹாறூன்,அஷ்ஷெய்க் ALM.சபீல் (நளீமி), சகோ, முஹம்மத் ஹாபிழ், SLMCயின் கொள்கை பரப்புச் செயலாளர் ULMN.முபீன் BA உள்ளிட கட்சி முக்கியஸ்தர்கள் பலரும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களும் கலந்துகொண்ட இப்பிரச்சாரக் கூட்டத்தில் விஷேட காணொளிக் காட்சிகளும் காண்பிக்கப்பட்டன.
Published by



Leave a comment